Thursday, 7 August 2014

இந்தியாவில் 'போர்னோ' குற்ற வழக்குகள் 100 சதவீதம் அதிகரிப்பு

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோ மற்றும் படங்களை வெளியிடுவது, குழந்தைகளை வைத்து படமாக்கப்படும் பாலியல் வக்கிர காட்சிகளைப் பரப்புவது போன்ற போர்னோகிராபி சார்ந்த குற்ற வழக்குகள் கடந்த 2012-13 காலகட்டத்தில் மட்டும் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் புள்ளியல் விபரம் ஆகும்.
2012-ல் இத்தகைய வழக்குகள் மொத்தம் 589 பதிவாகின. ஆனால் கடந்த ஆண்டு இவற்றின் எண்ணிக்கை 1,203 ஆக அதிகரித்துள்ளது என்கிறது அந்தப் புள்ளி விபரம். ஆந்திர மாநிலத்தில் இருந்தே அதிகபட்சமாக 234 வழக்குகள் எழுந்துள்ளன. இரண்டாவது இடத்தில் கேரளா இருக்கிறது. இங்கு 177 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 159 வழக்குகளும் பதிவாகியுள்ளன. உ.பி.யில் 2012-ல் மட்டும் 26 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. 2012-ல் அசாம் மாநிலத்தில் ஒரு வழக்கு கூட பதிவாகாத நிலையில் 2013-ல் 111 புகார்கள் பதிவாகியுள்ளன. ராஜஸ்தானில் பதிவான வழக்குகள் 81. இது கடந்த 2012-ல் 48 ஆக இருந்தது.
இந்த புள்ளவிபரங்கள் அனைத்தையும், பாஜக எம்.பி. வருண் காந்தி மக்களவையில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 67, 67 ஏ, 67 பி-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் எண்ணிக்கை 60% மேல் அதிகரித்திருக்கின்றன எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய வழக்குகளின் அடிப்படையில் கைதான 737 பேரில், 167 பேர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், 130 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர்.
விசாரணைக்கு முற்றுக்கட்டை போடும் தகவல் பற்றாக்குறை:
குழந்தைகளை பயன்படுத்தி செய்யப்படும் பாலியல் வக்கிர குற்றங்கள் குறித்த தகவல் பற்றாக்குறை காரணமாகவே இவை தொடர்பான விசாரணைகள் முடங்கிப்போகின்றன என கூறப்படுகிறது. போதிய தகவல் இல்லாததால், இத்தகைய விசாரணையை மேற்கொள்ளும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இது குறித்து 'துளிர்' குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் வித்யா ரெட்டி கூறும்போது, "தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பானது குழந்தைகள் பாலியல் வக்கிரகாட்சிகள் தொடர்பான புள்ளி விபரங்களை அளிப்பதில்லை. இதனால் இந்தப் பிரச்சினையின் ஆழம் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இத்தகைய குற்றங்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை சேகரிக்கும் முறை நெறிப்படுத்தப்பட வேண்டும்.
2007-ல் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய குற்றங்கள் குறித்த புள்ளிவிபரங்கள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளை அடித்து துன்புறுத்தி தண்டனை வழங்குவது, குழந்தைகளை ஆபாச படங்களில் பயன்படுத்துவது போன்ற குற்றங்களை தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் புள்ளி விபரத்தில் இடம்பெறவில்லை. ஏனெனில் இவை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய கூடிய குற்றங்களாக இவை அங்கீகரிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
குற்றங்களின் முகம் மாறிவருகிறது என்பதை விசாரணை அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. பாலியல் குற்றங்களில் தொழில்நுட்ப பயன்பாடு அவற்றின் தன்மையை மாற்றிவிட்டன. அதற்கேற்ப காவல்துறையும், தொழில்நுட்பத்தை விசாரணையில் பயன்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இத்தகைய குற்றங்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவு செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும். இதற்கு காவல்துறையினருக்கு போதிய தொழில்நுட்ப பயிற்சியினை அரசே வழங்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போர்னோகிராபி சார்ந்த வழக்குகள் பதிவாவது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

Tuesday, 5 August 2014

காமன்வெல்த் போட்டியில் இந்தியா - ஒரு பார்வை

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 215 பேர் பங்கேற்றனர். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை.
தடகள பிரிவில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேபோல காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் தங்கம் வென்றார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இவை இந்த காமன்வெல்த் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனைகள்.
தமிழகத்தின் தீபிகா – ஜோஷ்னா ஜோடி குவாஷ் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது. இப்பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. இதன் மூலம் நாட்டுக்கும் தமிழகத்துக்கும் அவர்கள் பெருமை சேர்த்தனர். இந்த காமன்வெல்த்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாக தமிழகத்தின் சதீஷ் சிவலிங்கம் பளு தூக்குதலில் தங்கம் வென்று நமது மாநிலத்துக்கு பெருமை சேர்த்தார்.
2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியுடன் ஒப்பிடும்போது இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த முறை இந்தியா 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது. இந்த முறை 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 64 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த முறை இந்தியாவில் போட்டி நடைபெற்றது நமது வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது.
இம்முறை இந்தியாவுக்கு மல்யுத்தப் போட்டியில் அதிகபட்சமாக 5 தங்கம் கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக துப்பாக்கி சுடுதலில் 4 தங்கத்தை இந்திய வீரர், வீராங்கனைகள் வென்றனர். பளு தூக்குதலில் 3 தங்கம் கிடைத்தது. வட்டு எறிதல், பாட்மிண்டன், ஸ்குவாஷ் ஆகியவற்றில் தலா 1 தங்கம் கிடைத்தது.
30 வெள்ளிப் பதக்கங்களில் ஒன்பதை துப்பாக்கி சுடும் போட்டியில் நமது வீரர்கள் வென்றனர். இதற்கு அடுத்தபடியாக பளு தூக்குதலில் 5 வெள்ளி கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து தங்கத்தை கோட்டை விட்ட இந்திய அணி வெள்ளியுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
தங்கம் வென்ற வீரர்கள் விவரம்
சதீஷ் சிவலிங்கம்
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் ஆடவர் 77 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். மொத்தம் 328 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 179 கிலோ) எடையைத் தூக்கினார். 22 வயதாகும் சதீஷ், ஸ்னாட்ச் பிரிவில் 149 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்தார்.
சஞ்ஜிதா சானு
மணிப்பூரை சேர்ந்த சஞ்ஜிதா மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தவரும் சஞ்ஜிதா தான்.
சுகன் தேவ்
மேற்கு வங்கத்தின் ஹவுராவைச் சேர்ந்த சுகன் தேவ் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்குதலில் தங்கம் வென்றார். 2010-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இதே பிரிவில் சுகன் தேவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அபிநவ் பிந்த்ரா
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த அபிநவ் பிந்த்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த காமன்வெல்த் போட்டியில் அவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்.
அபூர்வி சந்தேலா
21 வயது இளம் வீராங்கனையான அபூர்வி ஜெய்ப்பூரை சேர்ந்தவர். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இவர் தங்கம் வென்றார். 2012-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இப்போது சர்வதேச போட்டியில் தங்கம் வென்று துப்பாக்கி சுடுதலில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
ராகி சர்னோபட்
மகாராஷ்டிரத்தை சேர்ந்த வீராங்கனை ராகி சர்னோபட் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். 2008-ல் இளையோர் காமன்வெல்த் போட்டியிலும் ராகி தங்கம் வென்றுள்ளார். 2010-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பாரீஸ் பிரிவிலும் தங்கத்தை கைப்பற்றினார். உலக சாம்பியனான தேஜஸ்வினியையும் இவர் வீழ்த்தியுள்ளார்.
ஜீது ராய்
10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் இருப்பவர் ஜீது ராய். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இரு பதக்கங்களை வென்ற சாதனை படைத்தவர். காமன்வெல்த்தில் 50 மீ்ட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
அமீத் குமார்
2013-ல் உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பிரபலமானவர் அமீத் குமார். 20 வயதே ஆகும் அமீத் குமார், 2012-ல் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து மிக இளம் வயதில் (18) ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை பெற்றார். காமன்வெல்த் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
வினேஷ் போகத்
காமன்வெல்த் மல்யுத்தத்தில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றவர் வினேஷ் போகத். 19 வயதாகும் இவர் ஹரியாணாவைச் சேர்ந்தவர், முன்னாள் மல்யுத்த வீராங்கனை கீதா போகத்தின் உறவினர்.
சுஷில் குமார்
2010-ம் ஆண்டில் மல்யுத்தத்தில் உலக சாம்பியன் ஆனவர் சுஷில் குமார். 2012-ல் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 4 தங்கம் வென்றுள்ள சுஷில் குமார், இந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இப்போட்டியில் தொடர்ந்து இரு தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இம்முறை முதல்முறையாக 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.
பபிதா குமாரி
ஹரியாணாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனையான பபிதா குமாரி மகளிர் 55 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தத்தில் தங்கம் வென்றார். சர்வதேச அளவில் அவர் வென்ற முதல் தங்கப்பதக்கம் இது. இதற்கு முன்பு 2010 காமன்வெல்த்தில் வெள்ளியும், 2012 உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.
யோகேஷ்வர் தத்
ஏற்கெனவே ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் யோகேஷ்வர் தத். கடந்த முறை காமன்வெல்த் போட்டியில் 60 கிலோ ப்ரி ஸ்டைல் பிரிவில் தங்கம் வென்ற யோகேஷ்வர், இந்தமுறை 65 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
விகாஷ் கவுடா
கர்நாடகத்தின் மைசூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் விகாஷ் கவுடா. இந்த காமன்வெல்த் போட்டியில் 63.64 மீட்டர் தூரம் வட்டு எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை இவர் கைப்பற்றினார். இப்போது தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1959 காமன்வெல்த்தில் மில்கா சிங் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதே இந்தியா தடகள போட்டியில் வென்ற ஒரே தங்கமாக இருந்தது.
காஷ்யப்
ஹைதராபாதைச் சேர்ந்த காஷ்யப் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். கடந்த காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இவர், இப்போது முழுமூச்சுடன் போராடி தங்கத்தை கைப்பற்றியுள்ளார். 2012-ல் மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.
தீபிகா பலிக்கல் - ஜோஷ்னா
ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற இந்த ஜோடிகளுக்கும் பெரிய அளவில் அறிமுகம் தேவையில்லைதான். சர்வதேச ஸ்குவாஷ் தரவரிசையில் முதல்முறையாக 10 இடத்துக்குள் வந்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் தீபிகா. 2003-ல் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பிரிட்டிஷ் குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர் ஜோஷ்னா. தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் 7 பட்டங்களை வென்றுள்ளார்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் கிளரிக்கல் பதவி

தமிழகத்தின் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கி நம்மால் டி.எம்.பி., என்ற பெயரால் பெரும்பாலும் அறியப்படுகிறது. தனியார் துறை சார்ந்த ஷெட்யூல்டு வங்கியான டி.எம்.பி., நவீனமய சேவைகளுக்கும், சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காகவும் பிரசித்தி பெறுகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருப்பது மற்றொரு சிறப்பாகும். இந்த வங்கியில் கிளரிக்கல் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராகவும் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகளாக இருந்தால் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எழுதி முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: ஆன்-லைன் முறையிலான அப்ஜெக்டிவ் வகைத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/-க்கான டி.டி.,யை Tamil Nadu Mercantile Bank Ltd., என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 13.08.2014
இணையதள முகவரி: <http://career.tmb.in/>

கேன்பின் ஹோம்ஸில் அதிகாரிகள்

கனரா வங்கியின் வீட்டு வசதி தொடர்புடைய பிரத்யேக நிறுவனமாக கேன்பின் ஹோம்ஸ் நிறுவப்பட்டது. பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் ஜூனியர் ஆபிசர் பிரிவில் காலியாக உள்ள 20 காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேவைகள்: 01.07.2014 அடிப்படையில் வயது 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாக தேவைப்படும். பணி புரிய இருக்கும் மையத்தின் மொழியறிவு பெற்றிருப்பதும் கட்டாயத் தேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.100/-க்கான டி.டி.,யை CAN FIN HOMES LTD., என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Deputy General Manager-HRM, Can Fin Homes Ltd., Registered Office: No.29/1, 3 rd floor, Sir. M N Krishna Rao Road, Basavangudi, Bangalore-560 004, Karnataka State 
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள்: 18.08.2014
இணையதள முகவரி: <http://www.canfinhomes.com/>

ஓ.என்.ஜி.சி.,யில் வேலை வேண்டுமா

ஆயில் அண்டு நேச்சுரல் கேஸ் லிமிடெட் என்ற ஓ.என்.ஜி.சி., நிறுவனம் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்திக்காக உலகெங்கும் அறியப்படுகிறது. இந்த நிறுவனம் அரசுத் துறை சார்ந்த ஒரு மகாரத்னா நிறுவனம் என்பது மற்றொரு சிறப்பாகும். இந்த
நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 138 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்: ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் A-2 பிரிவில் 97 இடங்கள் உள்ளன. இதில் அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவில் புரொடக்சன், மெக்கானிகல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டி.ஏ., கிரேடு 3 வேதியியல், எலக்ட்ரானிக்ஸ், பாய்லர், சிவில் ஆகியவை அடங்கும். A-1 பிரிவில் 40 இடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவில் பாய்லர், எலக்ட்ரிகல், புரொடக்சன் ஆகியவை அடங்கும். இவை தவிர்த்து W-1 பிரிவிலும் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாக அஸிஸ்டெண்ட் டெக்னீசியன் பிரிவுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ படிப்பும், இதர பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு படிப்புடன் தொடர்புடைய துறையில் சான்றிதழ் படிப்பும் தேவைப்படும். முழுமையான தகவல்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ரூ.300/-ஐ ONGC Power Jyoti A/C Number30827318409 என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கியில் சலான் மூலம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 22.08.2014
இணையதள முகவரி: www.ongcindia.com

BANKING GK

1.The oldest Joint Stock Bank of India -- Allahabad Bank
2. The bank founded by Freedom Fighter Dr. Bhogaraju Pattabhi Sitaramayya -- Andhra Bank
3. First bank to open a branch outside India -- Bank of India, London, 1946
4. The first bank to be given an ISO 9002 certificate for one of its branches -- Canara Bank
5. The Postal Dept has issued a commemorative stamp in the name of thisbank celebrating 100 years in 2011 -- Central Bank of India
6. First Indian Bank to be wholly owned by Indians -- Central Bank of India
7. The bank formed on the efforts of Lala Lajpat Rai -- Punjab National Bank
8. The only merger of nationalized banks took place between -- Punjab National Bank and New Bank of India in 1993
9. The bank whose brand equity is "Pygmy Deposit Scheme" -- Syndicate Bank
10. The bank which was conceived by Shri GD Birla -- UCO Bank
11. The bank which was inaugurated by Mahatma Gandhi in 1919 -- Union Bank of India
12. The largest among nationalized banks -- Punjab National Bank
13. The bank established in the year 1913 as Bank of Mysore Ltd. at the instance of the banking committee headed by the great Engineer - Statesman, Late Dr. Sir M.Visvesvaraya -- State Bank of Mysore

List of CMDs of Public Sector Banks

• State Bank of India------------------Smt. Arundhati Bhattacharya
• Allahabad Bank------------------------- Rakesh Sethi
• Andhra Bank ------------------------C. V. R. Rajendran
• Bank of Baroda----------------------S. S. Mundra
• Bank of India-------------------------V. R. Iyer
• Bank of Maharashtra- ---------------Sushil Muhnot
• Canara Bank-------------------------- R. K. Dubey
• Central Bank of India---------------- Rajeev Rishi
• Corporation Bank--------------------Sadhu Ram Bansal
• Dena Bank ----------------------------Ashwini Kumar
• Indian Bank -------------------------T. M. Bhasin
• Indian Overseas Bank--------------M. Narendra
• Oriental Bank of Commerce -------S. L. Bansal
• Punjab & Sindh Bank --------------Jatinder Bir Singh
• Punjab National Bank --------------K. R. Kamath
• Syndicate Bank ----------------------Sudhir Kumar Jain
• UCO Bank ----------------------------Arun Kaul
• Union Bank of India -----------------Arun Tiwari
• United Bank of India----------------- Vacant
• Vijaya Bank--------------------------- V. Kannan
• IDBI Bank Ltd M---------------------S. Raghavan
• Bharatiya Mahila Bank---------------Usha Anantha Subramaniyan

IMPORTANT MARKETING ABBREVIATIONS

IMPORTANT MARKETING ABBREVIATIONS 

1. ABM: Account Based marketing
2. Ad: Advertising
3. AIM: Alternative Investment Market
4. B2B: Business to Business
5. BDI: Brand Development Index
6. BEP: Break Even Point
7. BI: Business Intelligence
8. CDI: Category Development Index
9. CLS: Costumer Location System
10. CLV: Customer Lifetime Value
11. CMS: Content Management System
12. CPC: Cost Per Click
13. CPL: Cost Per Lead
14. CPS: Cost Per Sale
15. CR: Concession Rate
16. CRM: Content Relationship Management
17. CRM: Customer Relationship Management
18. CTR: Click through rate
19. DM: Digital Marketing
20. DM: Direct Mail
21. DRA: Direct Response Advertising
22. eCommerce: Electronic Commerce
23. EM: Email
24. EOQ: Economic Order quality.
25. F500: Fortune 500
26. FDI: Foreign Direct Investment
27. GRS: Gross rating Point
28. IDRA: Industries Development and Regulation Act
29. IMF: International Monetary Fund
30. LTV: Life Time Value
31. MAA: Marketing Authorization Application
32. MAP: Marketing Automation Platform
33. MKT: Marketing
34. MLM: Multi Level Marketing
35. MR: Market Research
36. MS: Market Share
37. MS: Market Surveillance
38. NPD: New Product Development
39. PAN: Permanent Account Number
40. POP: Point of Purchase Display
41. POS: Point of Sale Display
42. PPA: Pay Per Action
43. PPC: Pay Per Click
44. PPI: Pay Per Impression
45. PPL: Pay Per Lead
46. R&D: Research and Development
47. ROI: Return on Investment
48. ROMI: Return on Marketing Investment
49. RPM: Resale Price Maintenance
50. SE: Search Engine
51. SEM: Search Engine Marketing
52. SEO: Search Engine Optimization
53. SERP: Search Engine Results Page
54. SFA: Sales Force Automation
55. SMM: Social Media Marketing
56. SMO: Social Media Optimization
57. TAP: Targeted account programs
58. TMV: True Market Value
59. UPC: Universal Product Code
60. UX: User Experience
61. VAT: Value Added Tax
62. WOMM: Word of Mouth Marketing

GENERAL AWARENESS

GENERAL AWARENESS 

1) What is the name of the mission announced by the Union Govt. on 28 July 2014 envisioned to protect the indigenous breeds of cows in the country?
– Rashtriya Gokul Mission

2) What is the theme of the Science Express which was flagged-off from Safdarjung Railway Station (Delhi) on its third phase of journey on 28 July 2014?
– Biodiversity

3) Which debutant weightlifter from India on 27 July 2014 broke the gamesrecord to win a gold medal in men’s 77kg event at the ongoing Commonwealth Games 2014 at Glasgow?
– Satish Sivalingam

4) The licences of six Delhi-based non banking financial companies (NBFCs) were cancelled over a period of three months from April to June 2014. Thesecancellations were made by which entity which is the statutory authority on NBFCs?
– The Reserve Bank of India (RBI)

5) Which telecom company recently became the first in India to have a combined subscriber base of over 300 million?
– Bharti Airtel

6) According to reports released on 27 July 2014 yet another intrusion by China was made on 22 July when some Chinese graziers put up three tents in the Indian territory. They withdrew after talks between troops oneither side of the border. This intrusionwas made in which sector?
– Demchok Sector of Ladakh (in Jammu and Kashmir)

7) Public sector based Central Bank during July 2014 announced its plans to sell 4% of its stake to LIC for Rs. 581crore. This stake sale is planned to meet bank’s capital requirement of Rs. 2,000 crore this fiscal. With this proposed sale Union Govt.’s holding inCentral Bank would come down to
– 84%

8) What is the name of the typhoon which killed thirteen people in China and affected about 2.5 million people before being dissipated on 26 July 2014?
– Typhoon Matmo

9) Which company signed an agreement to acquire all the three hydroelectric power plants of Jaiprakash Associates Ltd. (JAL) with a combined production capacity of around 1,800 MW?
– Reliance Power

10) Who won the 2014 Hungarian Formula One (F1) Grand Prix on 27 July2014?
– Daniel Ricciardo of Australia

Monday, 4 August 2014

ஐ.ஏ.எஸ். வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்


பல்லாயிரக்கணக்கான மாதிரி வினா-விடைகளைச் சேகரித்து இரவு பகலாக மாதிரித் தேர்வு எழுதி எழுதிப் பயிற்சி பெற்ற மாணவர்கள்கூட ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியவில்லை. இதற்குத் தீர்வு முழுமையான தயாரிப்பு இல்லாததுதான்.

அடிப்படைத் தேவை

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் உள்ள இந்திய வரலாறு, இந்திய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சிமுறை, இந்தியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி, இந்தியச் சுற்றுச் சூழல், பல்லுயிர்ப் பெருக்கம், பருவநிலை மாற்றம் குறித்த அடிப்படையான பொது விஷயங்கள் எல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதுவே அடிப்படையானது.

பற்றி எரியும் பிரச்சினைகள்

தேர்வுக்குத் தயாராகும் காலகட்டத்தில் நிகழுகிற தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பற்றிய தெளிவான அறிவும் அவசியம்.

நல்ல தரமான ஆங்கில, தமிழ்ச் செய்தித் தாள்களைத் தொடர்ந்து படித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்வது நல்லது.

பற்றி எரியும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது பெரிதும் உதவும்.தேசியப் பிரச்சினைகள், சர்வதேசப் பிரச்சினைகள், இந்தியாவோடு தொடர்புடைய சர்வதேச செய்திகள், பொருளாதாரம் சார்ந்தவை, வரலாறு சார்ந்தவை, மசோதாக்கள் சார்ந்தவை, உச்சிமாநாடுகள், தேசிய - சர்வதேச அமைப்புகளின் மாநாடுகள் - ஒப்பந்தங்கள், தேசிய - சர்வதேச விருதுகளும் பரிசுகளும், செய்திகளில் முக்கியத்துவம் பெறுபவர்கள், செய்திகளில் முக்கியத்துவம் பெறும் இடங்கள், விளையாட்டுச் செய்திகள், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த செய்திகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்தவை, இயற்கைப் பேரழிவுகள் என வகைப்படுத்த வேண்டும்.

முக்கியத் தேர்வில் நாட்டு நடப்பு குறித்த நமது எண்ணங்களையும் விமர்சனங்களையும் தீர்வுகளையும் கட்டுரைகளாகவும் விளக்க விடைகளாகவும் எழுத வேண்டியதிருக்கும். எனவே, ஆரம்பத்திலிருந்தே நாட்டு நடப்புகள் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் படித்து வருவது இத்தேர்வில் வெற்றி பெறப் பெரிதும் துணைநிற்கும்.

முந்தைய கேள்வித்தாள்கள்

முந்தைய ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான கேள்வித்தாள்கள் எவ்வாறு, எந்தெந்த வகைகளில் அமைந்துள்ளன என்பதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புரிந்துகொள்வது அவசியம்.

ஒரு பழைய முதல்நிலைத் தேர்வு முதல் தாளில் நேரடியாக விடைகளைத் தேர்ந்தெடுக்கிற வகையில் 15சதவீதத்துக்கும் குறைவான கேள்விகளே அமைந்துள்ளன. 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட 4 கூற்றுகளில் எது சரி, எது தவறு என்று கண்டறியும் வகையில் அமைந்துள்ளன. இந்த வகைக் கேள்வி அமைப்பு குறிப்பிட்ட அந்த விஷயத்தைப்பற்றி நமக்குத் தெளிவு இருக்கிறதா என்பதைப் பரிசோதிப்பதாய் அமைந்துள்ளது.

முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களில், பாடத்திட்டத்தின் எந்தெந்தப் பகுதிகளுக்கு எந்தெந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நுட்பமாகப் புரிந்துகொண்டால், எதிர்வரும் தேர்வில் கேள்விகள் எப்படி அமைய முடியும் என்பதை ஓரளவுக்குச் சரியாக ஊகிக்க முடியும். அது மட்டுமல்ல முந்தைய ஆண்டுக் கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகள், எந்தெந்தப் பகுதியில் இருந்து கேட்கப்பட்டுள்ளனவோ அந்தப் பகுதிகள் எல்லாம் மிக முக்கியமாகப் படிக்க வேண்டிய பகுதிகள். அந்தப் பகுதிகளை முழுமையாக, நுட்பமான விவரங்கள் உட்படப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஆண்டுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் முந்தைய ஆண்டு கேள்வித் தாள்களை வைத்துத் தேர்வு எழுதிப் பழகலாம். இந்தப் பயிற்சியில் எந்த அளவுக்கு விடையளிக்க முடிகிறதோ அதுதான் அவர்களது தயாரிப்பின் தரம்.கேள்வித்தாளைப் புரிந்துகொண்டாலே பாதி வெற்றி. கேள்வித்தாளை அவற்றின் வகைகளை, கேட்கப்படும் முறையை நன்கு தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறை எண்ணங்கள்

முதல்நிலைத் தேர்வின் இரண்டாவது தாள், போட்டியாளரின் தனி இயல்பையும் பல்வகைத் திறனையும் மனவளத்தையும் எழுத்துத் தேர்வு மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இத்தாளைச் சிறப்பாக எழுத நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தாளுக்கு விடையளிக்கும்போது நீங்கள் சூழலுக்கு ஏற்ற சிறந்த, நியாயமான முடிவை எடுக்கும் திறன், பிறரோடு இயல்பாக, சுமூகமாகப் பழகும் திறன் - நட்புணர்வோடு கலந்துரையாடும் திறன், கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் திறன், பிறர் கருத்துக்கு மதிப்பளித்துக் கவனிக்கும் இயல்பு, மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பு, அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தும் நேர்மை, மனித நேயம், உடன் பணியாற்றுபவர்களும் மன மகிழ்ச்சியோடு ஒத்துழைப்பு நல்க வைக்கும் அணுகுமுறை உடையவர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள விடைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு மட்டுமின்றி மேற்கண்ட சிறந்த திறமைகளையும் பண்புகளையும் உடையவராக உங்களை மாற்றிக் கொள்ளவும் வேண்டும்.

ஆங்கிலப் புரிதல் திறனைப் பயிற்சி மூலம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐ. ஏ. எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை, ஆர்வமாக மாறி ஆக்கப்பூர்வமான லட்சிய வெறியாக உயர வேண்டும். கடுமையான உழைப்பைவிட விவேகமான உழைப்பே இத்தேர்வின் வெற்றிக்கு வித்திடுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

(கட்டுரையாளர், ஒரு பேராசிரியர் )

உதவித்தொகை: அறிவியல் படிக்க மாதம்-ரூ.5 ஆயிரம்

பள்ளி மாணவர்களை அறிவியல் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட பணிகள் பக்கம் ஈர்த்திட மாணவர் அறிவியல் ஊக்கத்தொகை திட்டம் (Kishore Vaigynanic Protsahan Yojana-KVPY) என்ற புதுமையான கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது.
நேர்முகத் தேர்வு
படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களை அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேரவைப்பது இந்தத் திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்படும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல், உயிரி-வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பம் போன்ற அறிவியல் சம்பந்தப்பட்ட பட்டப் படிப்பு படிப்பதற்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும், முதுகலை படிக்க ரூ.7 ஆயிரமும் கல்வி உதவித்தொகை (Fellowship) பெறலாம். மேலும், பட்டப் படிப்பு படிப்போருக்கு எதிர்பாராத கல்விச் செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரமும், இதேபோல் முதுகலைப் படிப்புக்கு ரூ.28 ஆயிரமும் தனியாக வழங்கப்படும். இதற்குத் தகுதியான மாணவர்கள் திறனறித் தேர்வு (100 மதிப்பெண்) மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இப்பணியைப் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science_IISc) மேற்கொள்கிறது.
மூன்று வகையான மாணவர்கள்
இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு மூன்று வகையாக மாணவர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
முதலாவது தற்போது பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கான பிரிவு. எஸ்எஸ்எல்சி தேர்வில் அறிவியல், கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்கள் தேவை. எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 70 சதவீத மதிப்பெண்கள் போதுமானது. தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்குப் பட்டப் படிப்பு முதலாகத்தான் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கிடையே, அவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். இதற்காக அவர்களுக்கு மத்திய அரசின் செலவில் முகாம்கள் நடத்தப்படும். அவர்கள் பிளஸ்-2 தேர்வில் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம்) எடுக்க வேண்டியது அவசியம்.
இரண்டாவது பிரிவு பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கானது. பிளஸ்-2 முடித்துவிட்டு அறிவியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இதற்குத் தகுதியுடையவர்கள். மேற்குறிப்பிட்ட மதிப்பெண் தகுதிதான் இதற்கும்.
மூன்றாவது பிரிவு தற்போது அறிவியல் பட்டப் படிப்பில் முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உரியது. அவர்கள் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வில் மேற்குறிப்பிட்ட மதிப்பெண் தகுதி பெற்றிருக்க வேண்டும். பெல்லோஷிப் பெறுவதற்கு முன்பாகப் பட்டப் படிப்பில் முதல் ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 40 சதவீத மதிப்பெண்கள் போதும். ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (Integrated M.Sc. M.S.) படிக்கும் மாணவர்களும் இந்த உதவித்தொகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
நவம்பரில் தேர்வு
இதற்கான 2014-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நவம்பர் 2-ந் தேதி சென்னை, பெங்களூர், மும்பை, கொச்சி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஆன்லைனிலும், பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு மையங்களிலும்
(Off-line) நடத்தப்பட உள்ளது. இதற்கு www.kvpy.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள், பி.எஸ்சி. முதல் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதம் 8-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலமாகவோ இந்த இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலமாக
விண்ணப் பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை அக்டோபர் 2-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் அனுப்பி விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச்சீட்டு தபால் மூலம் அனுப்பப்படும். தேர்வு மையங்களி்ன் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இந்தியாவை உயர்த்திப் பிடித்த சதீஷ்

இந்தியர்களுக்குச் சுதந்திர வேட்கையை விதைத்தது வேலூரில் நடந்த புரட்சி. வேலூருக்கான சிறப்புகளின் பட்டியலில் தன்னையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார் 23 வயது இளம் விளையாட்டு வீரரான சதீஷ் குமார் சிவலிங்கம்.
நடந்து முடிந்திருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ உடல் எடை கொண்ட இளம் ஆடவர் பிரிவில் 149 கிலோ எடையைத் தலைக்கு மேல் தூக்கித் தங்கப் பதக்கம் வென்று உலகைத் தமிழகம் நோக்கிப் பார்க்க வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரரின் முந்தைய சாதனையை முறியடித்திருக்கும் சதீஷ், தற்போது பணியாற்றுவது தெற்கு ரயில்வேயில். இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியதன் பின்னணியில் ஒளிந்திருக்கிறது ஓர் ஏழைத் தந்தையின் கனமான கனவு.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரிதான் இவரது சொந்த ஊர். இவரது தாத்தா ஒரு பீடித்தொழிலாளி. தாத்தாவின் உழைப்பும், அப்பாவின் கனவும்தான் தன்னை வெற்றியின் சிகரத்தில் அமரவைத்திருப்பதாக நெகிழ்வுடன் தனது நினைவுகளை மீட்டினார் சதீஷ். “ பீடி சுற்றும் தொழில், தனது தலைமுறையோடு ஒழிந்துவிட வேண்டும் என்று உழைத்து, எனது அப்பா சிவலிங்கத்தைப் படிக்க வைத்திருக்கிறார் தாத்தா. அப்பாவுக்குப் பள்ளியில் படிக்கும்போதே பளு தூக்குவதில் ஆர்வம் இருந்திருக்கிறது.
இந்த விளையாட்டுக்கான தினசரித் தேவை புரதமும் கொழுப்பும் நிறைந்த உணவு. ஆனால் தாத்தா வீட்டில் அதற்கு வழியில்லை. என்றாலும் எப்படியாவது ராணுவத்தில் சேர்ந்து தாத்தாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று உறுதியாக இருந்த அப்பா, பளு தூக்கும் பயிற்சியை இடைவிடாமல் செய்துகொண்டே இருந்தார். இதனால் அவரது உடல் கட்டுக்கோப்பாக இருந்தது.
அதற்குக் கைமேல் பலனும் கிடைத்தது. ராணுவத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு 1985 முதல் 2001 வரை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்தபோது 1986 -ல் தேசிய அளவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் முதலிடம் பெற்றார். ஆனால் ராணுவப் பணிச் சூழல் காரணமாகப் பளு தூக்கும் போட்டிகளில் அடுத்தடுத்த கட்டங்களை அப்பாவால் எட்ட முடியவில்லை.
இதனால் தனது கனவை என்னைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்ள விரும்பினார். ஒரு மகனாக அவரது கனவுகளை நான் இப்போது மினி ஒலிம்பிக்கில் (காமன் வெல்த்) நனவாக்கியிருக்கிறேன். ஒலிம்பிக்கிலும் வெல்ல வேண்டும் என்பதுதான் என் கனவு” என்று வெற்றிப் பெருமிதத்துடன் சொல்கிறார் சதீஷ்.
சதீஷ், எளிதாக இந்தச் சாதனையை நெருங்க முடிந்ததா? இதை விவரிக்கிறார், சதீஷை உருவாக்கியிருக்கும் அவரது அப்பா முன்னாள் ராணுவவீரரான சிவலிங்கம்.
“அவன் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பளு தூக்குதல் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். பள்ளிக்கூடத்துல பளு தூக்குற விளையாட்டெல்லாம் கிடையாதுப்பா என்பான். 12 வயது முதல் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். 12 வயதில் 15 கிலோ தூக்குவான். சத்துவாச்சாரி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் மாலை மிக உற்சாகமாக வீட்டுக்கு ஓடி வந்தான். மாவட்ட அளவில் 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்குதலையும் அரசாங்கம் சேர்த்துவிட்டது என உடற்பயிற்சி ஆசிரியர் சொல்கிறார். நீங்கள் வந்து கேளுங்கள் என்றான். ஆச்சரியம்தான். 2006, 2007 ஆண்டுகளில் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்றான். இப்படித்தான் சதீஷின் பயணம் தொடங்கியது” என்று சொல்லும் சிவலிங்கம் பிறகு 22 வயதிற்குள் மாநில அளவில், தென்னிந்திய அளவில் தேசிய அளவில் என்று வளர்ந்து, 77 கிலோ எடைப் பிரிவில் சதீஷ் தேசிய சாம்பியன் ஆகி வென்று குவித்த பதக்கங்களை நம் கண் முன்னால் பரப்புகிறார். சதீஷின் சிறிய வீடு கோப்பைகளாலும் பதக்கங்களாலும் நிறைந்திருக்கின்றன.
“77 கிலோ வெயிட்டைத் தாண்டிட்டா போட்டியில கலந்துக்க முடியாது. அதுக்காக ரொம்ப கவனமா சாப்பிடுவான். முட்டையில இருக்கிற மஞ்சள் கரு சாப்பிட மாட்டான். வாழைப்பழம் சாப்பிட ஆசையா இருக்கும்மா என்பான் ஆனால் சாப்பிட மாட்டான். வாரத்தில 4 நான்கு நாட்கள் கொழுப்பு இல்லாத சிக்கன் (250 கிராம்), வேக வைத்த காய்கறிகள், இரவு ஒரு கப் பால். இது மட்டும்தான் அவன் சாப்பாடு. நீங்க வேற என்ன கொடுத்தாலும் சாப்பிட மாட்டான். அவனோட உணவுக் கட்டுப்பாடும், ஒரு நாள்கூட நிறுத்தாத பயிற்சியும்தான். அவனுக்கு வெற்றியக் கொடுத்திருக்கு” என்று நெகிழ்ந்துபோகிறார் சதீஷின் தாய்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை


இந்திய விண்வெளித் துறையின் கீழ் செயல்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ஐஎஸ்ஆர்ஓ) உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு ஐஎஸ்ஆர்ஓ மையங்களில் நியமிக்கப்படுவார்கள். இதற்காக ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 17 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய இந்தியர்கள் ஆகஸ்ட் 7 வரை இந்தப் பணிக்காக விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்
மொத்தம் 233.
வயது
ஆகஸ்ட் 7 அன்று பொதுப் பிரிவினர் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்; ஓபிசி வகுப்பினர் 29 வயதுக்குள்ளும், எஸ்சி/எஸ்டி வகுப்பினர் 32 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து கலை, வணிகம், மேலாண்மை, அறிவியல், கணினிப் பயன்பாடு ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்திருக்கவும் வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
முதல் கட்டமாக விண்ணப்பதாரர்கள் கல்வித் திறன் அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அத்தேர்வு வரும் அக்டோபர் 12 அன்று அகமதாபாத், பெங்களூர், சென்னை, கவுகாத்தி, ஹைதராபாத், புது டெல்லி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் நடத்தப்படும். இதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ100. இதை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சலான் மூலம் கட்ட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடையோர் http://www.isac.gov.in/centralocb-2014/ocb page1.jsp என்னும் இணைய தள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை ஆன்லைனில் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான பிரத்யேக ஆன்லைன் சலானைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை நிரப்பி அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் கட்டணத்தைக் கட்ட வேண்டும். அந்தச் சலான் மூன்று பகுதிகளாக இருக்கும். அதில் ஒன்றை வங்கி வைத்துக்கொள்ளும். எஞ்சிய இரண்டில் ஒன்றை விண்ணப்பதாரர் தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொன்றை ஐஎஸ்ஆர்ஓவுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதிக்குள் கிடைக்கும்படி, சாதாரணத் தபாலில் Administrative Officer (ICRB), ISRO Headquarters, Antariksh Bhavan, New BEL Road, Bangalore -560 094 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 07.08.2014
விண்ணப்பக் கட்டணம் கட்ட கடைசித் தேதி: 08.08.2014
ஆவணம் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: 14.08.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 12.10.2014
கூடுதல் விவரங்களுக்கு:

கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன?: ரிசர்வ் வங்கி அலுவலர் தேர்வில் கேள்வி


கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன, இந்தியில் பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன போன்ற கேள்விகள் ஆர்.பி.ஐ. அலுவலர் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான (கிரேடு-2) தேர்வு நாடு முழுவதும் ஆன்-லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கணிதம், புத்தி கூர்மை, ஆங்கிலம், பொது அறிவு என நான்கு பிரிவுகளில் மொத் தம் 200 வினாக்கள் கேட்கப் பட்டிருந்தன.
தேர்வில் பொது அறிவு பிரிவில் மொத்தம் 80 வினாக்கள் கேட்கப்பட்டன. அதில், 42-வது வினாவாக, கோச்சடையான் படத் தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பதில்கள் பட்டியலில் தேர்வு செய்வதற்காகக் கொடுக்கப்பட் டிருந்தன.
இதேபோல், மற்றொரு கேள்வியாக இந்தியில் வெளி யான பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன எனக் கேட்டு வித்யாபாலன், கரினா கபூர், பிரியங்காசோப்ரா, இவர் களில் யாரும் இல்லை எனப் பதில்கள் பட்டியலில் கொடுக்கப் பட்டிருந்தன.
நாட்டின் மிக மதிப்பு வாய்ந்த மத்திய ரிசர்வ் வங்கியின் அலுவலர் பணிக்குப் பொது அறிவு பிரிவில் இவ்வாறு சினிமாவில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இது குறித்து தேர்வு எழுதிய கோவை மாணவர் ஒருவர் கூறுகையில், ஆர்.பி.ஐ. அலுவலர் தேர்வில் இது போன்ற கேள்விகள் மிகக் கூர்மை யாகவும், யோசிக்க வைப்பதாக வும் இருக்கும். சினிமாவில் இருந்து இதுபோன்று கேட்கப்பட மாட்டாது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது எங்களை குழப் பத்தில் ஆழ்த்தியது என்றார்.
இது குறித்து வங்கி மற்றும் அரசு பணித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கும் அம்பேத்கர் இலவச கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேஷ் சுப்பையன் கூறியதாவது:
நாட்டின் உயரிய வங்கியாகக் கருதப்படும் ஆர்.பி.ஐ. அலுவலர் தேர்வில் டி.வி. நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளைப் போல் கேட்டுள்ளது கண்டிக்கத் தக்கது.
மாணவர்களின் புத்திகூர்மை யையும், பொது அறிவையும் சோதிக்கும் அடிப்படையில் கேள்விகள் இருக்க வேண்டும்.
இதேபோல், இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.ஐ.) சார்பில் நடத்தப்பட்ட அலுவலர் தேர்வில் இந்தியில் யார் உயரமான நடிகை, ஒரு இந்திப் படத்தை சொல்லி யார் இதில் நடிகராக நடித்தது போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன.
அப்போதே, இதற்கு கண்டனம் தெரிவித்தோம். மீண் டும் அதேபோன்று கேள்வி கேட்கப் பட்டுள்ளது. இது, கேள்விகளை தயாரிக்கும் பேராசியர்களின் தகுதிக்குறைபாட்டை வெளிப் படுத்துகிறது. இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதை வரும் காலங்களில் நிறுத்த வேண்டும் என்றார்.

சிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சேர்க்கப்பட மாட்டாது: மத்திய அரசு

யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சிசாட் இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “சிவில் சர்விசஸ் முதற்கட்ட தேர்வு- பேப்பர் 2-ல் 'ஆங்கில மொழி புரிதல் திறன்கள்' என்ற கேள்விப் பகுதியில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "2011ஆம் ஆண்டு சிவில் சர்விசஸ் தேர்வு எழுதியவர்களுக்கு 2015ஆம் ஆண்டுத் தேர்வில் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார்.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் பல அமளிகளைச் சந்தித்து வந்தது. சிசாட் தேர்வுகளில் கிராமப்புறங்களிலிருந்து வந்து எழுதும் மாணவர்களுக்கு தற்போதைய நடைமுறை போதிய வாய்ப்புகளை வழங்குவதில்லை என்றும் ஆங்கிலம், இந்தி மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பணித் தேர்வுகள் நடைபெறுவதாகவும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்நிலைத் தேர்வுகளில் சிசாட் 1 மற்றும் சிசாட் 2 ஆகியவற்றில் தலா 200 மதிப்பெண்களைக் கொண்ட இரண்டு வினாத்தாள்களில் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களால் மட்டுமே எழுதக் கூடிய வகையில் மிகவும் கடினமாக இருக்கிறது என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

இதில் ஆங்கிலம் தெரிந்த மாணவர்கள் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்தகட்டத்திற்கு முன்னேறிவிடுகின்றனர். ஆங்கிலம் தெரியாத, பிறமொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட கிராமப்புற மாணவர்கள் முதல்நிலைத் தேர்விலேயே தோல்வியடைந்து விடுகின்றனர்.

இதனால் ஆங்கிலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளும் அமளையில் ஈடுபட்டன.

இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சிசாட் 2-ல் ஆங்கில திறனறி குறித்த வினாக்களுக்கான மதிப்பெண்கள் தகுதிக்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று அரசு அறிவித்துள்ளது.