Showing posts with label இந்திய இயற்கைத் தாவரம்இந்திய இயற்கைத் தாவரம். Show all posts
Showing posts with label இந்திய இயற்கைத் தாவரம்இந்திய இயற்கைத் தாவரம். Show all posts

Friday, 27 December 2013

இந்திய இயற்கைத் தாவரம்இந்திய இயற்கைத் தாவரம்

இந்திய இயற்கைத் தாவரம்இந்திய இயற்கைத் தாவரம்

* ஒரு பகுதியில் எவ்வித முயற்சியும் இன்றி வளர்கிற தாவர வகையை இயற்கைத் தாவரம் என்பர். இந்தியாவின் காணப்படும் தாவரங்களை பரவல் அடிப்படையில் 6 வகைகளாகப் பிரிக்கலாம்.

பசுமை மாறாக்காடுகள்

* இந்தியாவில் 200 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் பகுதிகளில் இக்காடுகள் அமைந்துள்ளன. இக்காடுகளில் ஆண்டு முழுவதும் பசும் இலைகளோடு கூடிய மரங்கள் காணப்படுகின்றன.

* மேலும் இவை உயரமாக வளரக்கூடியவை. மழையளவு குறையும் பகுதிகளில், பசுமை மாறாக் காடுகளுக்குப் பதிலாக ஈரமுள்ள இலையுதிர்க்காடுகள் காணப்படுகின்றன.

* பசுமை மாறாக் காடுகள் அஸ்ஸாம், இமயமலையின் கிழக்குப் பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகள், அந்தமான் தீவுகள் ஆகியவற்றில் அமைந்துள்ளன.

* மதிப்பு மிக்க எபோனி, தேக்கு, மூங்கில் போன்ற மரவகைகள் இக்காடுகளில் காணப்படுகின்றன.

இலையுதிர் காடுகள்

* இந்தியாவில் 10 முதல் 200 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் இலையுதிர்க்காடுகள் அமைந்துள்ளன.

* இங்குள்ள மரங்கள், வறண்ட பருவ காலங்களில் ஆவியாதலைத் தடுப்பதற்காக இலைகளை உதிர்த்து விடுகின்றன.

* பருவ மழையாக உள்ள காரணத்தால், பருவக் காற்றுக் காடுகள் இலையுதிர் வகையைச் சார்ந்தவை.

* இவ்விலையுதிர்க் காடுகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளிலும், வடசமவெளியை ஒட்டியமைந்த இமயமலையின் அடிவாரப் பகுதிகளிலும், தக்காணப் பீடபூமியின் வடக்கு மறஅறஉம் கிழக்குப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. தேக்கு, சால், சந்தனம், ரோஸ்வுட் மற்றும் மூங்கில் ஆகிய மரங்கள் இக்காடுகளில் உள்ளன.

* தேக்கு விலையுயர்ந்த மர வகையாகும். இது கப்பல் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. அடுத்து சாலமரம், இந்தியாவில் உள்ள மிக முக்கிய மரவகையாகும்.

இது அதிகமாக இருப்புப் பாதையின் குறுக்குக் கட்டையாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை மதிப்புடைய சந்தன மரக்காடுகள் மைசூரில் காணப்படுகின்றன.

முட்புதர்க் காடுகள்

* 50 முதல் 100 செ.மீ. வரை மழையளவுள்ள பகுதிகளில் முட்புதர்க் காடுகள் உள்ளன.

* இங்குள்ள மரங்கள், புற்களைத் தின்னும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, கிளைகளிலும், தண்டுகளிலும் முள் அமைப்புகளைக் கொண்டுள்ளன. மாபல், கைர் ஆகியவை முக்கிய மரங்களாகும்.

* இத்தகைய காடுகள் அதிக அளவில் இராஜஸ்தான், கர்நாடகம், செளராஷ்டிரா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.

பாலைவனத் தாவரங்கள்

* 25 செ.மீ.க்கும் குறைவாக மழையளவு உள்ள பகுதிகளில் தாவரங்கள் காணப்படுகின்றன.

* தார் பாலைவனத்தின் எல்லைப்பகுதி மற்றும் தக்காணப் பீடபூமியின் சில பகுதிகளிலும், இவ்வகைத் தாவரங்கள் காணப்படுகின்றன.

* சப்பாத்திக் கள்ளி, சிரோபடிக் ஆகிய மர வகைகள் நன்கு வளர்கின்றன. இத்தாவரங்கள் உறிஞ்சும் நீரை அதிக நாட்கள் வரை தக்க வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட அளவு பயன்படுத்தக்கூடியவை. இவை பொருளாதார முக்கியத்துவம் உடையவை அல்ல.

மலைக்காடுகள்

* இக்காடுகள் மலைச்சரிவுகளில் காணப்படுகின்றன. இக்காடுகள் மலைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு வேறுபட்டுக் காணப்படுகின்றன.

* 900 மீ உயரம் வரையுள்ள சரிவுகளில் அயன மண்டலக் காடுகளும், அதனை அடுத்து 2700 மீ. உயரம் வரை அகன்ற இலைக்காடுகளும், 2700 முதல் 3600 மீ உயரத்திற்கு இடைப்பட்ட சரிவில் ஊசியிலைக் காடுகளும் அமைந்துள்ளன.

* 4800 உயரம் வரை ஆல்பைன் காடுகளும், 4800 மீட்டருக்கு மேல் பனி வயல்களும் அமைந்துள்ளன. பனி வயல்களில் தாவரங்களே காணப்படுவதில்லை.

மாங்குரோவ் காடுகள்

* கங்கை மற்றும் பிரமபுத்திரா ஆகிய ஆற்றுச் சதுப்பு நில டெல்டாக்களில் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன.

* இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ிங்கு மரங்கள் குட்டையாகவும், அவற்றின் வேர்கள் நீருக்கு மேல் தோன்றும்படியாகவும் அமைந்துள்ளன.

* இத்தகைய காடுகளில் சுந்தரி வகை மரங்கள் சிறப்பாகக் காணப்படுவதால் இக்காடுகள் சுந்தரவனக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

* இமய மலையின் அடிவாரத்தில் தராய் காடுகளும் இவ்வகையைச் சார்ந்தவையே.

காடுகளின் பயன்கள்

* காடுகளின் முக்கியப் பயன் நீராவி அளிப்பை அதிகரித்து மழை பொழிய உதவுவதே ஆகும்.

* தெற்கில் தேக்கும், மத்திய இந்தியாவில் சால மரமும், வட இந்தியாவில் தேவதருவும் முக்கிய மரங்களாகும். அவை கட்டடம் கட்டவும், ரயில்வேயில் குறுக்குக் கட்டையாகப் போடவும், படகுகள் கட்டவும் பயன்படுகின்றன.

* மென் மரங்களான ஊசியிலைக் காட்டு மரங்கள் பெட்டிகள், தீக்குச்சிகள் மற்றும் மரக்கூழ் தயாரிக்கப் பயன்படுகின்றன.

* லைம் என்னும் புல்லிலிருந்து பெறப்படும் எண்ணெய், கொசுவர்த்திகள் செய்யப்பயன்படுகிறது. கோரை வகைப் புற்கள் பாய் பின்னப் பயன்படுகின்றன.

* திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிகவும் புகழ்பெற்றது. கடுக்காய், ஆவாரம் பட்டை போன்றவை தோல் பதனிடப் பயன்படுகின்றன.

* காடுகளின் பயன்பாடுகளின் காரணமாகவே காட்டுப் பயிற்சியாளர் பயிற்சிக்காக கோவை, டேராடூன் ஆகிய இடங்களில் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* மத்திய அரசு டேராடூனில் காட்டு ஆராய்ச்சிக் கழகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. காடுகளைப் பாதுகாப்பதில் ஈடுபட்டு வரும் ஒரு முக்கிய இயக்கம் உத்திரப் பிரதேசத்தில் தோன்றி செயல்பட்டு வரும் சிப்கோ இயக்கமாகும்.

* இந்தியாவில் 1894 முதலாகவே காடுகள் கொள்லை பின்பற்றப்பட்டு வருகிறது. இது 1952-ல் திருத்தப்பட்டது. 1988-ல் இந்திய அரசு புதிய காடுகள் கொள்கையை அறிவித்து காடுகளை மேம்படுத்தி வருகிறது.

* 1950-ம் ஆண்டு முதல் நாடெங்கிலும் மரம் நடுவிழா ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்று வருகிறது.

* அதிக வளர்ச்சியும், செழிப்பும் இல்லாத காடுகளைத் திருத்தம் செய்து நல்ல இனத்தைச் சேர்ந்த நாட்டுச் செடிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை, காட்டு இலாகாவினர் பல மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த முறையே குமரி பயிர் முறை என்று அழைக்கப்படுகிறது.

* காட்டிலாகா நிலங்களை குத்தகைக்கு எடுக்கும் நிலமில்லா ஏழைகளை குமரிதாரர்கள் என்பர்.

* அந்தச் செடிகளுக்கிடையே குமரிதாரர்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களையும் விளைவிக்கலாம்.

* தமிழ்நாட்டில் 1984-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி காடுகளின் மொத்த பரப்பளவு 2.2 மில்லியன் ஹெக்டேர். மொத்த நிலப்பரப்பில் 17 சதவீத பகுதிகள் காடுகளாகும்.

இந்திய மண் வகைகள்

* இயற்கை வளங்களில் மிக முக்கியமான வளம் மண். புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகச்சிறிய பாறைத் துகள்களால் ஆன படலமே மண் எனப்படும்.

* இந்திய வேளாண்மை ஆய்வுக் குழு (இந்திய கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச்) மண் வகைகளை 8 பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.

* மண்ணின் மேல் அடுக்கு அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்பர். மழை பெய்தவுடன் மேற்பரப்பில்லுள்ள மண் கரைந்து செல்கிறது. இதற்கு தகடரிப்பு என்று பெயர்.

* நீர் தேங்குவதாலும், உரங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாலும் மண் வளம் பாதிக்கப்படுகிறது.

* ராஜஸ்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் மூலம் மண் அரிப்பு ஏற்படுகிறது.

* விவசாய முறையில் களைகளை நீக்கி அடர்த்தியான மண்ணை உருவாக்குவது மல்ச்சிங் எனப்படும்.

* சில முக்கிய மண் வகைகளான வண்டல் மண், கரிசல் மண், செம்மண், லாட்டரைட் ஆகியவற்றைக் காண்போம்.

* இந்தியாவில் உள்ள மண் வகைகளில் மிக அதிகப் பரப்பில் காணப்படுவதும், முக்கியமானதும் வண்டல் மண் ஆகும்.

* இந்தியாவின் பரப்பில் சுமார் 43 சதவீதம் வண்டல் மண்ணாக உள்ளது.