Monday 20 January 2014

எல்லைப் பாதுகாப்பு பணியிடங்கள்

எல்லைப் பாதுகாப்பு பணியிடங்கள்

இந்திய பாகிஸ்தான் போரின் விளைவாக உருவானதுதான் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் (பி.எஸ்.எப்.,) ஆகும். இந்திய பாதுகாப்புப் படைகள் மட்டுமன்றி பிற நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள எல்லையைப் பாதுகாப்பதற்கான பிரத்யேகமான படையாக இது திகழ்கிறது. இந்தப் படையில் துணை ஆய்வாளர் பிரிவில் உள்ள 58 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
வயது : பார்டர் செக்யூரிடி போர்ஸின் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். கல்வித் தகுதி : மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக மூன்று வருட 3 ஆண்டு கால இன்ஜினியரிங் டிப்ளமோவை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆண் விண்ணப்பதாரர்கள் உயரம் 165 செ.மீ.,க்கு குறையாமலும், பெண் விண்ணப்பதாரர்கள் உயரம் 157 செ.மீ., க்கு குறையாமலும் இந்த உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். கண்ணாடி அணிந்தவர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, டாகுமெண்டேஷன் அண்டு பிஸிக்கல் மெஷர்மெண்ட், பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், டிரேடு டெஸ்ட், நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனை என்ற பல கட்ட தேர்ச்சி முறையை எதிர் கொண்டு வெற்றி பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி ரூ.50 /-க்கான டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டருடன் பி.எஸ்.எப்.,பின் ஏழு மண்டலங்களில் ஏதாவது ஒரு மையத்திற்கு அனுப்ப வேண்டும். நமக்கு அருகிலுள்ள மாநில மையமான பெங்களூரு மையத்தின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. The Deputy Inspector General, STC BSF Banglore, Yelahanka, Banglore North, Karnataka - 560064.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 09.02.2014
இணையதள முகவரி: http://bsf.nic.in/doc/recruitment/r84.pdf

No comments:

Post a Comment