Tuesday 7 January 2014

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் 2

* அவ்வாறு உச்சநீதிமன்றம் அளிக்கின்ற கருத்து, ஆலோசனை வழங்குவது போன்றதால், குடியரசுத் தலைவர் விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம், ஏற்றுக்கொள்ளமாமலும் போகலாம்.
* அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு, அதற்குப் பின்னரும் தொடர்ந்து அமலில் இருக்கின்ற ஒப்பந்தம், உடன்படிக்கை, பட்டயம் அல்லது அது போன்ற சாசனங்கள் மற்றியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் குடியரசுத் தலைவர் கேட்டறியலாம்.
* இது குறித்த வழக்குகளில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை அளிப்பது உச்சநீதிமன்றத்தின் தவரிக்க இயலாத கடமையாகும்.
* உச்சநீதிமன்றம் தன்னால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்புரையை மறு ஆய்வு செய்வதற்குரிய அதிகாரத்தை Art.137 வழங்குகிறது.
* அதாவது உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்புரைகள் ஆணைகள் போன்றவை அதன்கீழ் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அவை உச்சநீதிமன்றத்தினைக் கட்டுப்படுத்தாது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
** நீதிமன்ற அவமதிப்பு - Contempt pf Court
* உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாக (court of record) திகழ்கிறது.
* ஆவண நீதிமன்றம் என்றால், தன்னை அவமதிப்பவர்களுக்கு அதுவே தண்டனை அளிக்கலாம்
* நீதிமன்றத்தைப் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும், நலமலெண்ணத்துடன் செய்யப்படும் விமர்சனங்கள், பொதுநலன் கருதி, நீதித்துறையின் செயல்பாடு குறித்துச்
சொல்லப்படும் நியாயமான விமர்சனம் ஆகியவை தவிர பிறவகைகளில் அதுகுறித்த விமர்சனங்களுக்காக, உச்சநீதிமன்றம் தண்டனைகளை விதிக்கலாம்.
* நீதிமன்ற அவமதிப்பு என்பது சிவில் மற்றும் கிரிமினல் ஆகிய வழக்குகளுக்கும் பொருந்தும், சிவில் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது, நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டு நடக்காமை ஆகும்.
* கிரிமினல் வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு என்பது. நீதிமன்றத்தின் செயல்பாடுகளைக் குறித்து தவறான எண்ணங்களை மக்களிடையே பரப்புதல், இதனால் நீதிமன்றத்தின் செயல்பாடுளுக்கு இடையூறு தோற்றுவித்தல், நீதிமுறை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் ஆகியவையாகும்.
** உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள்:
* உச்சநீதிமன்றம் தமக்குத் தேவைப்படும் விதிமுறைகள், கட்டுப்பாடுகளை குடியரசுத் தைவரின் அனுமதியின்பேரில், தாமே உருவாக்கிக் கொள்ளவும் அதிகாரம் பெற்றுள்ளது.
* உச்சநீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கும், ஏனைய அலுவலர்களும் தலைமை நீதிபதியால் அல்லது அவர் சொற்படி பிற நீதிபதியால், அல்லது அதிகாரியால் நியமிக்கப்படுகிறார்கள்.
* மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஏதேனும் வழக்குகள் தோன்றினால் அதனை தீர்க்கும் அதிகாரமும், உச்சநீதிமன்றம் வசமே உள்ளது.
* மத்திய அரசுத் தேர்வுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள், அதன் தலைவர் ஆகியோரை நீக்க வேண்டுமென்று, குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யும் அதிகாரமும் உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது.
** அரசியலமைப்பின் பாதுகாவலன் - Guardian of the Constitution
* உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியப் பணியாகக் கருதப்படுவது, அது அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல்படுவதே ஆகும்.
* மேலும் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் பணியிலும், அது இந்தியக் குடிமக்களின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது.
* மேலும் உச்சநீதிமன்றம் சரியானதென்று கருதும் விசயங்களையும், வழக்குகளையும் தாமே முன்வந்து பொதுநல வழக்கு(Public Interest Litigation) என்ற அடிப்படையில்,
எடுத்துக்கொண்டு உரிய தீர்வுகளை மக்களுக்கு வழங்கவும் அதிகாரம் பெற்றுள்ளது. இதனால் சமுதாய சமநீதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றங்கள் - High Courts
* Art.214ன் படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர்நீதிமன்றம் இருத்தல் வேண்டும்.
* எனினும் Art.231-ன் படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர்நீதிமன்றத்தைத் தோற்றுவிக்கவும் பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
* மாநில நீதித்துறையின் தலைமை அமைப்பாக உயர்நீதிமன்றம் திகழ்கிறது. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கென்று, 21 உயர்நீதிமன்றங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.
* கொல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்கள் 1862-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டன. 2004-ல் தமிழகத்தின் மதுரையில் உயர்நீதிமன்றத்தின் கிளை தோற்றுவிக்கப்பட்டது.
* 11வது நீதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் விரைவு நீதிமன்றங்கள் 01.04.2001 முதல் தொடங்கப்பட்டன.
* மாநில சட்ட உதவி ஆணையத்தின் உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் லோக் அதாலத் தொடங்கப்பட்டுள்ளது.
** உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் - Appointment of Judges
* ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் ஒரு தலைமை நீதிபதிகளையும், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிற எண்ணிக்கையில் பிற நீதிபதிகளையும் கொண்டு செயல்படும்.
* உச்சநீதிமன்றத்தைப் போலன்றி, உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கையை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை, மாறாக அந்த அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது.
* உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் மட்டுமின்றி குடியரசுத் தலைவருக்கு கீழ்காணும் பிற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவை:
* நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பதற்கென்று, கூடுதல் நீதிபதிகளை நியமிக்கும் 2 ஆண்டுகளுக்கு மிகாமல், குடியரசுத் தலைவர் நியமிக்கலாம்.
* உயர்நீதிமன்ற நீதிபதி இல்லாத போதோ அல்லது பணியாற்ற இயலாத சூழ்நிலையிலோ (உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர) அக்குறிப்பிட்ட காலத்திற்கு தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம்.
* அவ்வாறு நியமிக்கப்படும் நீதிபதி, நிரந்தரமாக நியமிக்கப்பட்ட நீதிபதி பணியேற்கும் வரை பதவில் இருப்பார்.
* எனினும் கூடுதல் நீதிபதியாக இருப்பினும், தற்காலிக நீதிபதியாக இருப்பினும் 62 வயது வரை மட்டுமே பணியாற்ற இயலும்.
* உயர்நீதிமன்ற பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, இந்திய தலைமை நீதிபதி, அந்த மாநில ஆளுநர் மற்றும் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆலோசித்த பின்னரே குடியரசுத் தலைவர் செயல்படுவார்.
* உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தமது 62 வயது வரை பதவி வகிக்கலாம். உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது குறித்து எழும் பிரச்சனைகளில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார்.
** உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள்:
1. இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. இந்திய நீதித் துறையில் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
3. ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ தொடர்ந்து பத்தாண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருத்தல் வேண்டும்.
** உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை:
* உயர்நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக (Independency) செயல்படுவதற்கென கீழ்வரும் செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது.
* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
* உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக் காலத்திற்குப் பிறகு அதே உயரிநீதிமன்றம் தவிர பிற உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் மட்டுமே அவர் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலும்.
* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.
* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் அந்தந்த மாநில தொகுப்பு நிதியத்தின் (Consolidated Fund of State)  செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், அம்மாநில சட்டப்பேரவையின் வாக்கெடுப்பு தேவையில்லை.
* மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை (Financial Emergency) தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட் இயலாது.
* உயர்நீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின் , குற்ற விசாரணை தீர்மானம் கொண்டுவரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.
* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையைப் பெற்ற பின்னர், ஒரு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு குடியரசுத் தலைவர் Art.222 அதிகாரம் வழங்குகிறது.
* எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்.
* அரசிலமைப்பின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்
* அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் - உச்சநீதிமன்றம்
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 65
* உச்சநீதிமன்ற கூடுதல் நீதிபதிகளின் பதவிக்காலம் - 2 ஆண்டுகள்
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கப்படும் முறை - குற்ற விசாரணை முறை
* குற்ற விசாரணை முறை புகுத்தப்பட்ட ஒரே நபர் - ஆர்.ராமசாமி(1991-93ல்)
* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - இந்திய தொகுப்பு நிதியம் (இந்திய ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து)
* உச்சநீதிமன்றத்தின் இணையதளம் - supremecourtofindia.nic.in
* நீதிப்புனராய்வு செய்யும் உச்ச அதிகாரம் கொண்ட அமைப்பு - உச்சநீதிமன்றம்
* அடிப்படை உரிமைகளை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் எதைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது - நீதிப்பேராணைகள்
* தற்போது உச்சநீதிமன்றத்தின் அதிகபட்ச நீதிபதிகளின் எண்ணிக்கை - 30 + 1
* உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை - 1950ல் - 8, 1956ல் - 11, 1960ல் -14, 1978ல் - 18, 1986ல் - 26, 2008ல் - 31
* உண்மையான அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும், பிற 7 நீதிபதிகளும் இடம் பெற்றிருந்தனர்.
* பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளை மேலும் நியமிக்க அரசியயமைப்பு வழி செய்துள்ளது.
* இந்த அதிகாரத்தின் அடிப்படையில் பாராளுமன்றம், தற்போதைய உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதியும் மற்றும் பிற 30 நீதிபதிகளும் இடம்பெற சட்டமியற்றியுள்ளது. (Art.124)
* உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
* குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிக்கும்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து செயல்பட வேண்டும்.
* இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை - 21
* மாநிலத்தின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாக விளங்குவது - உயர்நீதிமன்றம்
* சென்னை உயர்நீதிமன்றம் வேறு எந்த பகுதிக்கும் நீதிமன்றமாக செயல்படுகிறது - பாண்டிச்சேரி
* அடிப்படை உரிமைகளுக்காக நீதிப்பேராணைகளை வெளியிடும் அதிகாரம் பெற்றது - உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம்
* ஆளுநர் பதவி காலியாக உள்போது தற்காலிக ஆளுநராகச் செயல்படுபவர் - உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
* தனிநபர் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தால் பிறப்பிக்கப்படுவது - ஹேபியஸ் கார்பஸ்
* செயலுறுத்தும் நீதிப்பேராணை என்பது - மாண்டமஸ்
* கோ வாரண்டோ என்பது - தகுதி முறை வினவும் பேராணை
* அடிப்படை உரிமைகள் மற்றும் பிற உரிமைாகளுக்காக ஐந்து நீதிப்போராணைகளை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்ற அமைப்பு - உயர்நீதிமன்றம்
* உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் எதிலிருந்து வழங்கப்படுகிறது - மாநில தொகுப்பு நிதியம்
* உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது - 62
* மத்திய அரசு குழந்தைகள் நீதிச் சட்டத்தை இயற்றிய ஆண்டு - 1986
* இந்திய உயர்நீதிமன்றங்களில் மிகவும் பழமையானது கொல்கத்தா, மும்பை, சென்னை உயர்நீதிமன்றம். இது நிறுவப்பட்ட ஆண்டு ஜூன் 26,1862.
* சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு - ஜூன் 26,1862
* சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகார எல்லை - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளடக்கியது.
* தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு 1862 ஆகஸ்ட் 15 முதல் மெட்ராஸ் ஹை கோர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள சிலை - மனுநீதிச் சோழனின் சிலை.
* சென்னை உயர்நீதிமன்றத்தின் இணையதளம் http://www.hcmadras.tn.nic.in
* சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி - எம்.ஒய். இக்பால்
* தற்போதைய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியவர் - பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன். இவரின் கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்னரே தற்போதைய உயர்நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டது.
* சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்ட பழைய இடத்தின் பெயர் கொய்யா தோப்பு (ஜார்ஜ் டவுன்)
* சென்னை உயர்நீதிமன்றம் ஹென்றி இர்வின் வழிகாட்டுதலின் பேரில் கட்டப்பட்டது.
* உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக இருப்பது லண்டன் பெய்லி நீதிமன்றம்.
* இந்தியாவில் முதல் பெரிய உயர்நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்.
* உரிமையியல் நீதிமன்றத்தின் தலைவர் - மாவட்ட முன்சீப்

No comments:

Post a Comment