Friday 31 January 2014

ஸ்டாப் செலக்சன் கமிஷனின் பட்டதாரிகளுக்கான பொது எழுத்துத் தேர்வு

நமது நாட்டின் மத்திய அரசு தொடர்புடைய காலி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலமாக நிரப்பி வருவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக 2014ஆம் ஆண்டிற்கான கம்பைண்டு கிராஜூவேட் லெவல் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்னென்ன பிரிவுகள்?: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வின் மூலம் சென்ட்ரல் செக்ரடேரியட் சர்வீஸ், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன், இண்டலிஜென்ஸ் பீரோ, மினிஸ்ட்ரி ஆப் ரெயில்வே, வெளியுறவுத்துறை அமைச்சகம், சி.பி.டி.டி., சி.பி.இ.சி., டைரக்டரேட் ஆப் என்போர்ஸ்மெண்ட் அண்டு ரெவின்யூ, அஞ்சல் துறை, சென்ட்ரல் பீரோ ஆப் நர்காடிக்ஸ் உள்ளிட்ட மத்திய அரசுத் துறை பலவற்றில் உள்ள அப்பர் டிவிஷன் கிளார்க், இன்ஸ்பெக்டர், ஆடிட்டர் மற்றும் அஸிஸ்டெண்ட் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.
வயது : மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்ச வயது 18ஆகவும், அதிகபட்ச வயது விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து 26 அல்லது 27 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதி : விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து தகுதி மாறுபடுகிறது. இருந்த போதும் குறைந்த பட்ச தகுதி பட்டப் படிப்பு ஆகும். பொருளாதாரம், புள்ளியியல், கணிதம் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. முழுமையான விபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை : ரூ.100/-ஐ சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் பீஸ் ஸ்டாம்ப் வாயிலாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின்னர் உரிய மண்டல அலுவலக்த்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். தமிழ் நாட்டிலிருந்து விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Regional Director (SR), Staff Selection Commission, EVK Sampath Building, 2nd Floor, College Road, Chennai, Tamil Nadu-600006
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.02.2014
இணையதள முகவரி : <http://ssc.nic.in/notice/examnotice/CGLE-2014%20Notice.pdf>
Click Here

No comments:

Post a Comment