Thursday 30 January 2014

ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற நாள் (ஜன. 30, 1933)

ஜெர்மனியின் நாசிக் கட்சியின் தலைவராக விளங்கிய அடால்ப் ஹிட்லர் 1933-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் ஜெர்மனி நாட்டின் அதிபராக நியமிக்கப்பட்டார்.

பின்பு 1934-ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டின் தலைவர் ஆனார். அன்றுமுதல் தன்னுடைய இறப்பு வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார். ஹிட்லர் ஜெர்மனியின் பியூரர் என்று அழைக்கப்பட்டவர். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஸ்டாலினின் செம்படைகளிடம் ஜெர்மன் தலைநகர் பெர்லினின் ஹிட்லரின் நாசிக் படைகள் வீழ்ச்சியுற்றது. அப்படைகள் அவரை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரோடு அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டார். 

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

1882 - 32-வது அமெரிக்க குடியரசு தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பிறந்த தினம்
1874 - ஆன்மிகவாதி இராமலிங்க அடிகளார் மறைந்த தினம்
1889 - ஆஸ்திரியாவின் இளவரசர் ருடோல்ஃப் தனது காதலியுடன் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1945 - இரண்டாம் உலகப் போர்: பால்டிக் கடலில் வில்ஹெல்ம் கூஸ்ட்லொஃப் என்ற பயணிகள் கப்பல் சோவியத் நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கப்பட்டதில் அதில் பயணம் செய்த 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1964 - ரேஞ்சர் 6 விண்கலம் ஏவப்பட்டது.
1976 - தமிழ்நாட்டில் மு.கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.
2003 - பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது.

No comments:

Post a Comment