Thursday 27 February 2014

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரசாரம்: வேட்பாளர் செலவுக்கணக்கில் சேர்க்க முடிவு- தேர்தல் ஆணையம் அதிரடி

சமூகவலைத்தளங்களில் அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பா ளர்கள் பெயரில் செய்யப் படும் விளம்பரங்களையும் அவர் களது தேர்தல் செலவுக்கணக்கில் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான நெறிமுறைகளை வகுக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
சமீபகாலமாக அரசியல் கட்சிகளும், அதன் முக்கியத் தலைவர்களும் சமூகவலைத் தளங்களின் மூலம் தங்களது கருத்துக்களையும், பணிகளையும் வெளியிட்டு வருகின்றன.
கம்ப்யூட்டர் இருந்தால்தான் இன்டர்நெட்டை உபயோகிக்க முடியும் என்ற நிலை மாறி, சாதாரண வகை செல்போன்களிலேயே இன்டர்நெட் உபயோகிக்கும் முறை வந்துவிட்டதால், கோடிக் கணக் கணக்கான செல்போன் உபயோகிப் பாளர்களும் இணையதளத்தை பார்க்க வழி ஏற்பட்டுள்ளது.
இதனால், “பேஸ்புக்”, “டிவிட் டர்” போன்ற சமூகவலைத் தள பக்கங்கள் மீது அரசியல் கட்சி களின் பார்வை திரும்பியுள் ளது. பல பெரிய கட்சிகள், தங்களது கட்சிகளில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்ற தனிப்பிரிவினையே தொடங்கியுள்ளன. அ.தி.மு.க-வும் கடந்த வாரம் இப்பிரிவைத் தொடங்கியுள்ளது. இவ்வகையில் தமிழகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோ ரும், மேலும் பல அ.தி.மு.க, தி.மு.க எம்.பி.களும் பேஸ்புக் பக்கங்களில் இளைஞர்களுடன் பழகத் தொடங்கியுள்ளனர்.
பல கோடி ரூபாய் செலவு
சமூகவலைத்தளங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சில பெரிய கட்சிகள், பெரும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து, பிரமாண்டமாக தங்களது பக்கத்தை உருவாக்கி, அதை தொடர்ந்து செயல்படுத்தவும், ஆயிரக் கணக்கானோரை ‘நண்பர்கள்’ பட்டியலில் சேர்க்கவும் பல கோடி ரூபாயை செலவிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் போலியான முகவரிகள் ஏற்படுத்தப்படுவதா கவும் புகார்கள் எழுந்துள்ளன.
தலைமை தேர்தல் அதிகாரிகள்
இது பற்றி மத்திய தேர்தல் ஆணையத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், இப்பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையம் விவாதித்துள்ளது. சமூகவலைத் தளங்களின் விஸ்வருப வளர்ச்சியே கடந்த நாடாளுமன்ற தேர்தலுக் கும் இப்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு சமூகவலைத்தளத்தில் கடிவாளம் போட அனைத்து தலைமை தேர் தல் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரத்தினர் “தி இந்து”விடம் புதன்கிழமை கூறியதாவது:-
சமூவலைத்தளங்களில் அரசியல் கட்சிகள் பெரும் செலவில் பிரச்சாரத்தை மேற்கொள் ளத் தொடங்கியுள்ளன. அதனால் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு வழிவகை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, வேட்பாளரின் தேர்தல் செலவுக்
கணக்கில், சமூகவலைத் தளங்களில் செய்யப்படும் செலவுகளையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை எப்படி கணக்கிடுவது, எவ்வளவு பேரை வைத்து அவர்கள் இந்த பணியை செய்கிறார்கள் என்பது போன்ற தகவல்களைக் கண்டறிவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

No comments:

Post a Comment