Saturday 28 December 2013

ஆளுநரின் நிதித்துறை அதிகாரங்கள்

**
ஆளுநரின் நிதித்துறை அதிகாரங்கள்
* எந்த ஒரு பண மசோதாவும், நிதி மசோதாவும் ஆளுநரின் பரிந்துரையின்றி சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட இயலாது. பட்டஜெட் அல்லது ஆண்டு நிதிநிலை
அறிக்கைகளை மாநில சட்டப்பேரவை அல்லது ்வைகளின் முன் ஆளுநர் தாக்கல் செய்ய வேண்டும்.
* இது அவரது தலையாய கடமையாகும். மானியக் கோரிக்கைகளையும் ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் தாக்கல் செய்ய இயலாது.
* மானியக் கோரிக்கைகள் சம்மந்தமான திருத்தங்களுக்குக் கூட ஆளுநரின் பரிந்துரை அவசியமாகிறது.
** ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரங்கள்
* குடியரசுத் தலைவருக்கு இருப்பதுபோல தண்டனைகளை செயல்படுத்துவதை நிறுத்தி வைக்கவோ, தண்டனை அளவைக் குறைக்கவோ, குற்றவாளியை மன்னித்துத்
தண்டனையை முற்றிலுமாக நீக்கிவிடவோ ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
* மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை. மரண தண்டனையை இரத்து செய்யும் அதிகாரம் தவிர பிற அதிகாரங்கள் மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
** ஆளுநரின் நிலை
* ஆளுநரின் நிலை பற்றிக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இவரது அலுவலகம் மாநில அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவருக்கும் இடையே உள்ள அஞ்சல்
நிலையம் என்றும் கூறுவார்கள்.
* இவர் மாநில ஆட்சித் துறையில் ஒரு சிறந்த அங்கமாக விளங்குகிறார். அமைச்சரவையின் ஆலோசனைப்படி இயங்க வேண்டும் என்றிருந்தாலும், சட்டப்பேரவையில் எந்த
ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை முதல் அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும்போது பயன்படுத்துவார்.
* நெருக்கடிக் காலங்களின்போது குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாகக் செயல்படுவார்.
** மாநில அமைச்சரவை
* மாநில ஆட்சிக்குழு ஆளுநரின் தலைமையில் விடப்பட்டிருந்தாலும், அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் தான் இயங்க வேண்டும்.
* பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளுநர் சட்டப்பேரவையின் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை அழைத்து முதல்வராக இருக்கக் கேட்டுக்கொள்வார்.
* பிற அமைச்சர்களை முதல்வர் மற்ற அமைச்சர்களின் பட்டியலைத் தயாரித்து ஆளுநரிடம் சமர்ப்பிப்பார். அதனை அப்படியே ஆளுநர் ஏற்றுக்கொள்வார்.
* சட்டப்பேரவையின் உறுப்பினர் அல்லாதவரையும் அமைச்சராக நியமிக்கலாம். ஆனால் ஆறு மாத காலத்திற்குள் அவர் ஏதேனும் ஒரு சபையில் உறுப்பினராக வேண்டும்.
* எத்தனை அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்பதற்கு வரையறை இல்லை.
* எனினும் தற்போது இந்த வரையறை சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் வரை இருக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
* அமைச்சர்களின் எண்ணிக்கையை தேவைப்படும்போது கூட்டவோ, குறைக்கவோ செயயலாம்.
* மாநில அளவிலும் மூன்று விதமான அமைச்சர்கள் உள்ளனர். அவை: 1. கேபினட் அமைச்சர்கள் 2. மாநிலத்துறை அமைச்சர்கள் 3. துணை அமைச்சர்கள் ஆகியோர்.
* அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் ஆளுநரிடம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவி ஏற்பர்.

** அட்வகேட் ஜெனரல்
* மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரே அம்மாநிலத்தின், முதல் சட்ட அலுவலராவார்.
* இவர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அட்டர்னி-ஜெனரல் போலவே மாநில அளவில் செயல்படுகிறார்.
* அட்வகேட்-ஜெனரல், மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டு, அவரது விருப்பம் உள்ளவரை பதவியில் நீடித்திருப்பார்.
* உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு தகுதி பெற்ற நபர்களையே அட்வகேட் ஜெனரலாக ஆளுநர் நியமிக்க வேண்டும்.
* இவர் Art.177-ன் படி சட்டமன்றத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும், உரை நிகழ்த்துவதற்கும் உரிமை பெற்றுள்ளார். ஆனால் வாக்களிப்பதற்கு உரிமை இல்லை.

** மாநில சட்டப்பேரவை - The State Legislature
* ஆளுநரும் சட்டப்பேரவையும் சேர்ந்துதான் மாநில சட்டப்பேரவையாகும்.
* சில மாநிலங்களில் பேரவை (Legislative Assembly), மேலவை (Legislative Council) என இரண்டு அவைகள் இருக்கும்போது மேலவையும் சட்டப்பேரவையின் அங்கமாகும்.
* தற்போது பீகார், உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே மேலவைகள் உள்ளன.
* மேலவை இருக்கின்ற இடங்களில் அதனை நீக்கிவிடலாம் என்றோ, மேலவை இல்லாத இடங்களில் அதனை உருவாக்க வேண்டுமென்றோ சட்டப்பேரவை தீர்மானம் இயற்றி, பாராளுமன்றத்திற்குப் பரிந்துரைக்கலாம்.
* ஒரு மாநில சட்டப்பேரவையில் 500-க்கு மிகாமலும், 60-க்குக் குறையாமலும் மாநிலத்தின் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
* பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமலும், குறைந்தபட்சம் 40 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், அம்மாநிலத்தின் மேலவை அமைய வேண்டும்.
* மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் நகராட்சிகள், மாவட்ட வாரியங்கள், ஏனைய உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் இருந்து மூன்றில் ஒரு
பங்கினரும், ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து 12-ல் ஒரு பகுதியினரும் சட்டப்பேரவை உறுப்பினர்களால் மூன்றில் ஒரு பங்கினரும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* எஞ்சிய 6-ல் ஒரு பங்கினரை ஆளுநர் நியமிப்பார். மேலவைத் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி, ஒற்றை மாற்று வாக்கெடுப்பு மூலம் நடைபெற வேண்டும்.
* சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். மேலவை கலைக்க முடியாத, தொடர்ந்து நீடிக்கும் அவையாக விளங்கும். எனினும் மேலவையின் மூன்றில் ஒரு
பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டாண்டு முடிவிலும் பதவி விலகுவார்கள்.
* மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராவதற்கு 25 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* மேலவையில் உறுப்பினராக வேண்டுமானால் 30 வயது நிரம்பிய இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* மாநிலப் பட்டியலில் உள்ள விஷயங்கள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு உண்டு.
* பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்களில் பாராளுமன்றமும், மாநில சட்டப்பேரவையும் சட்டங்களை இயற்றலாம்.
* மாநில மேலவையின் நிலை, நாடாளுமன்ற மாநிலங்களவையின் நிலையைப் போன்றதே ஆகும்.
* அவையின் சிறப்புரிமைகள், உறுப்பினர்களின் தகுதியிழப்பு, இரண்டு அவைகளுக்கும் இடையேயான உறவு, அவை நடவடிக்கைகள், பண மசோதா அறிமுகம் போன்ற விஷயங்கள் அனைத்திற்கும் இது பொருந்தும்.
* ஆங்கிலோ-இந்திய சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் சட்டப்பேரவையில் இல்லாதிருக்கும்போது, ஆளுநர் ஒரு ஆங்கிலோ-இந்திய உறுப்பினரை நியமன உறுப்பினராக நியமிக்கலாம்.
* மாநில சட்டப்பேரவைக்கு சபாநாயகர் ஒருவரும், துணை சபாநாயகர் ஒருவரும் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* மக்களவை சபாநாயகர், துணை சபாநாயகர் போலவே இவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.
* மேலவைத் தலைவரும், மேலவை துணைத்தலைவரும் மேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர்.
* சட்டப்பேரவையின் பதவிக்காலம் இயல்பாக 5 ஆண்டுகள். எனினும் ஆளுநரால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கலைக்கப்படலாம்.
* 1976-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 420வது சட்டத்திருத்தம் சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக உயர்த்தியது.
* எனினு ம் 44-வது திருத்த சட்டம் மீண்டும் 5 ஆண்டுகளாக மாற்றம் செய்தது.
* மேலும் தேசிய நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்போது, மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலத்தை, பாராளுமன்றம் நீட்டிக்க இயலும்.
* எனினும் நெருக்கடி நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையின் பதவிக்கால நீட்டிப்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
** மாநில சட்டப்பேரவையின் உறுப்பினராவதற்கான தகுதிகள்:
* . இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* . மாநில சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவராக இருப்பின் 25 வயதும், மாநில சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவராக இருப்பின், 30 வயதும் நிரம்பியிருத்தல் வேண்டும்.
* . பாராளுமன்றம் அவ்வப்போது சட்டத்தின் மூலம் விதிக்கக்கூடிய பிற தகுதிகளையும் பெற்றிருத்தல் வேண்டும்.

** உறுப்பினர் தகுதிக் குறைபாடுகள்
* மைய அரசிடம்  அல்லது மாநில அரசின் ஊதியம் தரும் பதவிகள் எதையும் வகித்தல் கூடாது.
* மனநிலை தவறியவராக இருத்தல் கூடாது. கடன் தீர்க்க இயலாதவராக அறிவிக்கப் பட்டிருக்கக்கூடாது.
* இந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தலோ, அல்லது பிற நாட்டுக் குடியுரிமையைப் பெற்றவராகவோ இருத்தல் கூடாது.
* பாராளுமன்றத்தின் ஏதேனும் பிற சட்டத்தினால் தகுதியற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது.
* மாநில சட்டப்பேரவை உறுப்பினரின் தகுதி குறித்த விஷயங்களில் சபையின் தலைவர், மாநில ஆளுநருக்குத் தெரிவித்து அவரது முடிவைப் பெற்று அதன்படி நடக்க
வேண்டும்.
* இந்த விஷயத்தில் ஆளுநரின் முடிவே இறுதியானது. எனினும் ஆளுநர் இது குறித்த விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் கருத்தைப் பெறுவது அவசியமாகும்.

** மாநில சட்டமியற்றும் முறை
* ஒரு சபை முறை கொண்ட மாநிலங்களில் சட்டமியற்றும் முறையில் ஏதும் சிக்கல் இல்லை.
* ஏனெனில் அனைத்து மசோதாக்களும், சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதத்திற்குப் பின், நிறைவேற்றப்பட்டால், ஆளுநருக்கு அனுப்ப்படும். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அது சட்டமாகும்.
* ஆனால் இரு டபை முறை உள்ள மாநிலங்களாக இருப்பின் அங்கு சட்டமியற்றும் முறை, சற்றே மாறுபடுகிறது.
* பாராளுமன்றத்தில் சட்டமியற்ரும் முறைக்கும், மாநில சட்டப்பேரவையில் சட்டமியற்றும் முறைக்கு சிறிதே வேறுபாடு காணப்படுகிறது.
* மாநில சட்ட மேலவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மசோதா, மாநில சட்டப்பேரவையால் நிராகரிக்கப்பட்டால், அந்த மசோதா முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.
* பண மசோதாவைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தில் பின்பற்றும் வழிமுறைகளைப் போலவே, மாநில சட்டப்பேரவையிலும் பின்பற்றப்படும்.
* நிதி மற்றும் சாதாரண மசோதாக்களைப் பொறுத்தவரை மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பின்ற் சட்டவேலவைக்கு அனுப்பப்பட்டால், சட்ட மேலவை அந்த மசோதவை முற்றிலும் நிராகரிக்கலாம்
* மசோதாவில் திருத்தங்கள் புகுத்தலாம்
* மூன்று மாதங்கள் வரை எந்தவித பதிலும் தராமல் வைத்திருக்கலாம்.
* இவற்றில் எந்த வழியைப் பின்பற்றினாலும், சட்டப்பேரவை மீண்டும் அந்த மசோதாவை நிறைவேற்றி, இரண்டாவது முறையாக, சட்ட மேலவைக்கு அனுப்பினால், மீண்டும் 1 மாத காலம் வரை மேலைவை தாமதப் படுத்த இயலும்.
* அதற்கு மேலும் முடிவெடுக்காமல் வைத்திருந்தால், அந்த மசோதா நிறைவேறியதாகக் கருதப்படும்.
* அதன் பின்னர் ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமேலவையைப் பொறுத்தவரை சம அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.
* பணமசோதா தவிர பிற மசோதாக்களை அதிகபட்சம் 4 மாதங்கள் வரை காலதாமதம் செய்வது மட்டுமே சட்டமேலவையால் செய்ய முடிந்த ஒன்றாகும்.
* மாநிலங்களில் மசோதா மீது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைத் தீர்த்துக்கொள்வதற்கு கூட்டுக் கூட்டம் கூட்டும் முறை ஏதும் நடைமுறையில் இல்லை.
* மாநிலங்களில் இரு அவைகளும் ஆளுநர் உரையாற்றும்போதும், ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநரின் பேருரையின்போதும் மட்டுமே கூட்டுக் கூட்டமாக கூடுவர். இது தவிர பிற காரணங்களுக்காக கூட்டுக் கூட்டம் கூட்டப் படுவதில்லை.

No comments:

Post a Comment