Tuesday 10 December 2013

சில தகவல்கள்

அட அப்படியா!

ரயில் சக்கரம் அச்சுகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ள இடம்: எலஹங்கா (கர்நாடகா) பெட்டி தயாரிப்பது: பெரம்பூர், சென்னை.

முதன்முதலில் பேண்டேஜ் துணியை அறிமுகம் செய்தவர்கள் எகிப்தியர்கள்தான்.

முதன்முதலில் முகப்பவுடர் தயாரித்தவர்கள் இத்தாலியர்கள்.

காந்தியை "மோகன்' என்றழைத்தவர்

காந்தியடிகளின் நெருங்கிய நண்பரான சி.எப். ஆண்ட்ரூஸ், காந்தியடிகளை தென் ஆப்பிரிக்காவில் சந்தித்ததில் இருந்து அவரை மோகன் என்றே அழைத்து வந்தார். காந்தியடிகளும், ஆண்ட்ரூûஸ "சார்லி' என்றே அழைத்தார்.

காக்கைக்கு உபச்சாரம்

லண்டனில் லண்டன் டவர் என்ற புகழ்பெற்ற கோட்டை கோபுரத்தில் பல அண்டங் காக்கைகள் ஆனந்தமாய் வாழ்கின்றன. அந்தக் காக்கைகளைக் கருத்தோடு கவனித்துக் கொள்கிறார்கள். அந்தக் காக்கைகளை அரசு செலவிலேயே பராமரிக்கிறார்கள். இதற்குக் காரணம் இந்தக் காக்கைகள் அகன்று விட்டால் லண்டன் டவர் இடிந்து விழுந்துவிடும் என்ற நம்பிக்கையே.

தகவல்: விந்தை உலகம் - 1990

No comments:

Post a Comment