Wednesday, 4 September 2013

மத்திய அரசுப் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு


இந்திய அரசின் அமைச்சகப் பதவிகளையும், அரசுப் பணியிடங்களையும் யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக 4 பிரிவுகளின் கீழான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகளும் காலி இடங்களும்

யு.பி.எஸ்.சி., அமைப்பின் சார்பாக டெபுடி சூபரின்டென்டன்ட்-ஆர்க்கியாலஜி பிரிவில் 8 இடங்களும், லெக்சரர் பிரிவில் 1ம், சயிண்டிஸ்ட் பி பிரிவில் 21ம், ஆயுர்வேதா பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 5ம், யுனானி பிரிவு மெடிக்கல் ஆபிசரில் 3 என்ற அளவில் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

தேவைகள்

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிக பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் வரலாறு, ஆர்க்கியாலஜி, சமஸ்கிருதம், பெர்சியன், பிரக்ரித், பாலி, அராபிக், ஆந்த்ரபாலஜி ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வரலாறு, தொல்பொருள் தொடர்புடைய இரண்டு வருட ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்க்கியாலஜிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சயிண்டிஸ்ட் பி பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தாவரவியல் பிரிவில் முது நிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சித்தா மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆயுர்வேதப் பிரிவில் பட்டப் படிப்பும், யுனானி மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க இதே பிரிவில் பட்டப் படிப்பும் தேவைப்படும்.

இதர தகவல்கள்

யு.பி.எஸ்.சி.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்-லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணைய தளத்திலிருந்து அறியவும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 12/09/2013

No comments:

Post a Comment