Tuesday 9 December 2014

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்

ஒன்பதாம் வகுப்பு
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
- கம்பர்

சொற்பொருள்:
* உளவாக்கல் - உண்டாக்குதல், படைத்தல்
* நீக்கல் - அழித்தல்
* நீங்கலா - இடைவிடாது
* அலகிலா - அளவற்ற
* அன்னவர் - அத்தகைய இறைவர்
* சரண் - அடைக்கலம்
* நிலைபெறுத்தல் - காத்தல்
* தலைவர் - இறைவர்

இலக்கண குறிப்பு:
* யாவையும் - முற்றும்மை
* ஆக்கல், நீக்கல், விளையாட்டு - தொழிற்பெயர்
* அலகிலா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஆசிரியர் குறிப்பு:
* நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
* இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாததி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
* இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
* திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
* கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
* இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

நூல் குறிப்பு:
* வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தை தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
* கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் - இராமாவதாரம்
* இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
* உத்திரபிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
* கம்பராமாயணப் பாடல் பாலகண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது.

திருக்குறள்
சொற்பொருள்:
* அகழ்வாரை - தோண்டுபவரை
* தலை - சிறந்த பண்பு
* பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல்
* இறப்பு - துன்பம்
* இன்மை - வறுமை
* ஒரால் - நீக்குதல்
* மடவார் - அறிவிலிகள்
* விருந்து - வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
* நிறை - சால்பு
* ஒறுத்தாரை - தண்டித்தவரை
* போன்றும் - உலகம் அழியும்வரை
* நோநொந்து - துன்பத்திற்கு வருந்தி
* மிக்கவை - தீங்குகள்
* தகுதியான் - பொறுமையால்
* துறந்தார் - பற்றற்றவர்
* இன்னா - தீய

ஆசிரியர் குறிப்பு:
* இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
* இவரின் காலம் கி.மு.31 ஆண் நூற்றாண்டு என்று கூறுவர்.

நூல் குறிப்பு:
* திரு+குறள் = திருக்குறள்
* திரு= செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
* குறள் = குறுகிய அடி உடையது.
* இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
* அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25 அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
* இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

இலக்கண குறிப்பு:
* பொறுத்தல் - தொழிற்பெயர்
* அகல்வார், இகழ்வார் - வினையாலணையும் பெயர்
* மறத்தல், பொறுத்தல் - தொழிற்பெயர்
* நன்று - குறிப்பு வினைமுற்று
* விருந்து - பண்பாகு பெயர்
* ஒரால், நீக்குதல் - தொழிற்பெயர்
* நீங்காமை - எதிர்மறைத் தொழிற்பெயர்
* ஒருத்தார், பொறுத்தார் - வினையாலணையும் பெயர்
* தற்பிறர் - ஏழாம் வேற்றுமைத் தொகை.
* செய்யினும் - இழிவு சிறப்பும்மை
* நொந்து - வினையெச்சம்
* அரண், திறன் - ஈற்றுப்போலிகள்
* விடல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
* இறந்தார் - வினையாலணையும் பெயர்
* உண்ணாது - வினையெச்சம்
உரைநடை: திராவிட மொழிகள்
மொழிகள்:
* தனக்கென தனிச்சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி
* மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் - கிளைமொழிகள்.
* இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு:
* இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.
* அவற்றுள், 324 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிவியல் கணக்கொடுப்பு தெரிவிக்கின்றது.

இந்தியமொழிக் குடும்பங்கள்:
* இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் "இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்" என அடங்குவர்.
* நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

மொழிகளின் காட்சிசாலை:
* மொழியியல் அறிஞர் ச. அகத்தியலிங்கம் இந்திய நாட்டை "மொழிகளின் காட்சிசாலை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
* திராவிட மொழிக் குடும்பங்கள்:
தென்திராவிட மொழிகள்:
* தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா
நடுத்திராவிட மொழிகள்:
* தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபு
வடதிராவிட மொழிகள்:
* கரூக், மால்தோ, பிராகுய்
* திராவிட பெரு மொழிகள் = தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
* திராவிடம்: திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.
* திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.
* திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் - குமாரிலபட்டர்.
* திராவிட மொழிகள், திராவிட இநம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.
* கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

கால்டுவெல் கூற்று:
* தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன் (tamilian) அல்லது தமுலிக் (tamulic) என்று அழைத்தனர்.
* அவற்றுள் தமிழ், மிகுந்த சிற்ப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.
* எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் "திராவிட" எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.

ஈராஸ் பாதிரியார் கூற்று:
* திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.
* தமிழ் - திரமிள - திரவிட - திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாரதிரியார்.
* திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியைதான் குறிக்கும் என்கிறார்.

தலைமைச் சிறப்பு:
* திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை "முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மை திராவிட மொழி" எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.
* இம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.
* மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.
* எண்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.

சிறுபஞ்சமூலம்
கனவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- காரியாசான்

சொற்பொருள்:
* கண்ணோட்டம் - இறக்கம் கொள்ளுதல்
* எண்வனப்பு - ஆராய்சிக்கு அழகு
* வேந்தன் - அரசன்
* வனப்பு - அழகு
* கிளர்வேந்தன் - புகழுக்குரிய அரசன்
* வாட்டான் - வருத்தமாட்டான்

இலக்கணக்குறிப்பு:
* கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் - தொழிற்பெயர்கள்
* கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்

ஆசிரியர் குறிப்பு:
* காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
* இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
* இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.
நூல் குறிப்பு:
* இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
* இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.
* கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையின் வேர்களும் உடல் நோயைத் தீர்ப்பன.
* இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.
* ஐந்து அறக்கருத்துக்களும் மக்கள் மனநோயைப் போக்குவன.

பாஞ்சாலி சபதம்
சொற்பொருள்:
* எம்பி - என் தம்பி
* களிக்க - மகிழ
* மடப்பிடி - பாஞ்சாலி
* கோமான் - அரசன்(திருதராட்டிரன்)
* நுந்தை - நும் தந்தை
* அடவி - காடு
* தடந்தோள் - வலியதோள்
* மருங்கு - பக்கம்
* குலவு - விளங்கும்
* பண்ணவர் - தேவர்
* அரம்பையர் - தேவமகிளிர்
* வீறு - வலிமை
* கோலமுறு - அழகு மிக்க
* செறிந்த - அடர்ந்து
* கா - காடு
* குலவு - விளங்கும்
* ஞாலம் - உலகம்
* ஞானம் - அறிவு
* புன்மை - இழிந்த தன்மை
* சதுரங்கச் சேனை - நால்வகைப் படைகள்

இலக்கணக்குறிப்பு:
* அழைத்தனன் - முற்றெச்சம்
* மாநகர் - உரிச்சொற்றொடர்
* சார்ந்தவர் - வினையாலணையும் பெயர்
* நுந்தை - நும் தந்தை என்பதன் மரூஉ
* அடவி மலையாறு - உம்மைத்தொகை
* கடந்து - வினையெச்சம்
* தடந்தோள் - உரிச்சொற்றொடர்
* செறிந்து, பாய்ந்து - வினையெச்சம்
* பாலாடையும் நறுநெய்யும் தேனும் - எண்ணும்மை
* நீளமுடி, நன்செய், புன்செய் - பண்புத்தொகை
* காத்தல் - தொழிற்பெயர்
* தொல்லுலகு - பண்புத்தொகை
* தாளமும் வேளமும் - எண்ணும்மை
* பதமலர் - உருவகம்
* பாய்ந்து, செறிந்து - வினையெச்சங்கள்
* ஞாலமெலாம், மக்களெலாம் - எல்லாம் எனபதன் தொகுத்தல் விகாரம்.
* காத்தல் - தொழிற்பெயர்
* தாளமும் மேளமும் - எண்ணும்மை

ஆசிரியர் குறிப்பு:
* சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தலி 11.09.1882 ஆண்டு பிறந்தார்.
* பெற்றோர் - சின்னசாமி - இலக்குமி அம்மையார்
* துணைவி - செல்லம்மாள்
* இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
* ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
* இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.
நூல் குறிப்பு:
* பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
* பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
* இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.
சிறப்பு:
* பாரதியார் "பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி"  எனப் புகழப்பெற்றார்.
* சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

உரைநடை: இக்காலக் கவிதைகள்
உரைநடைக் காலம்:
* இருபதாம் நூற்றாண்டை "உரைநடைக் காலம்" என்பர்.
* எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
* இருபதாம் நூற்றாண்டில் அறிவியலும், இலக்கியமும் விரைவாக வளர்ந்தன.
* செய்யுள், உரைநடை என்னும் இரு வடிவிலும் புதுவகை இலக்கியங்கள் மலர்ந்துள்ளன.
பாரதியார்:
* பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக   இருந்தது.
* மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.
பாரதிதாசன்:
* தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
* "எங்கள் பகைவர் எங்கே மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"

கவிமணி:
*கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
*கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
*"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா"
*"சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்"
நாமக்கல் கவிஞர்:
*இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
"தமிழன் என்றேர் இனமுண்டு
தனியே அவற்கொரு குணமுண்டு"
பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்"
"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"
* காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர்.
முடியரசன்
* இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.
* ஆங்கிலமோ பிறமொழியோ
பயின்றுவிட்டால்
அன்னைமொழி பேசுவதற்கு நாணுகின்ற
தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
தென்படுமோ மொழியுணர்ச்சி?

சுரதா:
* சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
* உவமைக் கவிஞர் என்று அழைப்பர்.
* மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்.
முல்லைக்கோர் காடுபோலும்
முத்துக்கோர் கடலேபோலும்
சொல்லுக்கோர் கீரன்போலும்
தூதுக்கோர் தென்றல்போலும்
கல்விக்கோர் கம்பன்போலும்
கவிதைக்கோர் பரணர்போலும்
வில்லுக்கோர் ஓரிபோலும்
விளங்கினார், வென்றார், நின்றார்.
* சுரதாவின் பாடல்களில் வரலாற்றுச் செய்திகளும், இலக்கண விளக்கங்களும் கலந்து வரும்.
* சுரதா மறைமலையடிகளாரை உவமைகளால் பாராட்டியுள்ளார்.
வாணிதாசன்:
* பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்குகின்றன.
* சுத்தானந்த பாரதியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், தமிழ்ஒளி போன்றோர் மரபுக் கவிதைகளை புனைந்து தமிழன்னைக்கு மேலும் வளமும் பெருமையும் சேர்த்துள்ளனர்.
* மனிதகுல வளர்ச்சிக்கும் ஏற்றவாறு சிந்தனை மாற்றங்களும் சமூக மாற்றத்தின் விளைவே புதுக்கவிதையின் தோற்றம்.
* அமெரிக்கக் கவிஞர் "வால்ட்விட்மனின்" சாயலில் வசன கவிதை எழுதியவர் - பாரதியார்.
* பாரதிதாசன் உரைநடைகள் அனைத்தும் கவிதைநடை கொண்டவை.
* மேலை நாட்டு இலக்கியத் தொடர்பும், சமுதாயச் சூழ்நிலையும் தமிழில் புதியதொரு வடிவம் தோன்றக் காரணமாக இருந்தவை.
மணிக்கொடி:
* ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினார்.
* எழுத்து: எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு. செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.
வல்லிக்கண்ணன்:
* புதுக்கவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன.
* என்பது இவரின் புதுக்கவிதையன் எளிய வடிவை காட்டும்.
* புதுக்கவிதை வளர்ச்சியல் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.
* எழுத்து என்னும் புதுக்கவிதைகளைப் படைத்தவர் - எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு செல்லப்பா முதலியோர் ஆவர்.

No comments:

Post a Comment