Sunday 7 December 2014

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ்

மணிமேகலை - சீத்தலைச்சாத்தனார்

சொற்பொருள்:
* ஆயம் - தோழியர் கூட்டம்
* ஆசனம் - இருக்கை
* நாத்தொலைவில்லை - சொல் சோர்வின்மை
* யாக்கை - உடல்
* பிணிநோய் - நீங்கா நோய்
* பேதைமை - அறியாமை
* செய்கை - இருவினை
* உணர்வு - அறிவியல் சிந்தனை
* அரு - உருவமற்றது
* உரு - வடிவம்
* வாயில் - ஐம்பொறிகள்
* ஊறு - புலன்களின் இயல்பு
* நுகர்வு - இன்பதுன்ப நுகர்ச்சி
* வேட்கை - விருப்பம்
* பவம் - பயன் நோக்கிய செயல்
* தோற்றம் - பிறப்பு
* பெரும்பேறு - வீடுபேறு
* கொடு - கொம்பு
* அலகில - அளவற்ற
* தொக்க விலங்கு - விலங்குத்தொகுதி
* குரலை - புறம் பேசுதல்
* வெஃகல் - பெருவிருப்பம்
* வெகுளல் - கடுஞ்சினம் கொள்ளுதல்
* பொல்லாக் காட்சி - மாயத் தோற்றம்
* சீலம் - ஒழுக்கம்
* தானம் - கொடை
* புரைதீர் - குற்றம் நீங்கிய
* கேண்மின் - கேளுங்கள்
* உய்ம்மின் - போற்றுங்கள்
* உறைதல் - தங்குதல்
* கூற்று - எமன்
* மாசில் - குற்றமற்ற
* புக்கு - புகுந்து
* இடர் - இன்னல்
* முத்தேர் நகை - முத்துச் சிரிப்பு
* தொழுது - வணங்கி

இலக்கணக் குறிப்பு:
* தேவியும் ஆயமும் - எண்ணும்மை
* அருந்தவர், நல்வினை - பண்புத்தொகை
* வாழ்க - வியங்கோள் வினைமுற்று
* செய்தவம், வீழ்கதிர் - வினைத்தொகை
* பெரும்பேறு - பண்புத்தொகை
* ஆழ்நரகு - வினைத்தொகை
* பல்லுயிர், நல்லவினை, தீவினை, பேரின்பம் - பண்புத்தொகை
* ஆய்தொடி நல்லாய் - இரண்டாம் வேற்றுமா உருபும் பயனும் பயனும் உடன் தொக்க தொகை
* காமத்தீ - உருவகம்
* கடுஞ்சொல் - பண்புத்தொகை
* பொல்லக்காட்சி - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
* தெளிதல் - தொழிற்பெயர்
* பயன் தெரிபுலவர் - வினைத்தொகை
* அரைசன் - இடைப்போலி
* நல்லறம் - பண்புத்தொகை

பிரித்தறிதல்:
* எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
* அறிவுண்டாக = அறிவு + உண்டாக
* இயல்பீராறு = இயல்பு + ஈறு + ஆறு
* நன்மொழி = நன்மை + மொழி
* எனக்கிடர் = எனக்கு + இடர்
* நல்லறம் = நன்மை + அறம்
* தொழுதேத்தி = தொழுது + ஏத்தி
* உண்டென்று = உண்டு + என்று

ஆசிரியர் குறிப்பு:
* மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
* சாத்தான் என்பது இவரின் இயற்பெயர்.
* இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்
* தானிய வாணிகம் செய்தவர்.
* தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
* இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
* இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர்.
* இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவர்.

நூல் குறிப்பு:
* இந்நூல் ஐம்பெரும்காபியங்களுள் ஒன்று.
* சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதைத் தொடர்புடையவை.
* இவை இரண்டும் "இரட்டை காப்பியங்கள்" என அழைக்கப்படும்.
* மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் குறுவதனால் இந்நூலுக்கு "மணிமேகலை துறவு" என்ற பெயரும் உண்டு.
* இந்நூல் பெளத்த சமயச் சார்பு உடையது.
* முப்பது காதைகள் கொண்டது. இருபத்தி நான்காவது காதை என்பது ஆபுத்திரன் நாடு அடைந்த காதை பாடப் பகுதியாக இடம்பெற்றுள்ளது.
* கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் - மணிமேகலை
* தீவதிலகையின் உதவியால் அழுத சுரபியைப் பெற்றுப் புகார் நகரை மணிமேகலை அடைந்தாள்.

ஐம்பெரும்காப்பியங்கள்:
* சிலப்பதிகாரம்
* மணிமேகலை
* சீவக சிந்தாமணி
* வளையாபதி
* குண்டலகேசி

உணவே மருந்து
* தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
* பசியின் கொடுமையை "பசிப்பிணி என்னும் பாவி" என்றது மணிமேகலை காப்பியம்.
* "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என மணிமேகலையும் . புறநானூறும் கூறுகின்றன.
* திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
* முன் உண்டது செரித்தது கண்டு உண்பார்க்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்பது வள்ளுவர் வாக்கு.
* நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
* நோய்க்கு முதல் காரணம் உப்பு.
* "மீதூண் விரும்பேல்" என்றவர் ஒளவை.
* நீரின்றமையாது உலகு எனக் கூறியவர் - வள்ளுவர்.
* உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர் - திருமூலரும்.

அறுசுவையின் பயன்கள்:
* இனிப்பு - வளம்
* துவர்ப்பு- ஆற்றல்
* கைப்பு - மென்னை
* கார்ப்பு - உணர்வு
* உவர்ப்பு - தெளிவு
* புளிப்பு - இனிமை

நோய் நீக்கும் மூலிகைகள்
கீழக்காய்நெல்லி:
* இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்று கூறுவர்.
* மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
* இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.

துளசி:
* துளசி செயிடின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நார்க்கோவை, தலைவலி நீங்கும்.
* துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.

தூதுவளை:
* இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
* இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.
* இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.
* வள்ளலார் இதனை "ஞானப்பச்சிலை" என்று கூறுவார்.
* இது குரல் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.

குப்பைமேனி:
* குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
* இதனை "மேனி துலங்க குப்பைமேனி" என்று சிறபிப்பர்.

கற்றாழை:
* இது வறண்ட நிலத்தாவரம்.
* இதனை "குமரி" என்பர்.
* பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் "குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" என்பர்.

முருங்கை:
* இதனை அரைத்து தடவினால் எலும்பு முறைவி விரைவில் கூடும்.
* இரும்பு சத்து நிறைந்துள்லதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.

கறிவேப்பில்லை:
* இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரி செய்யும். மணமூட்டி உணவின் மாது விருப்பை உண்டாக்கும்.

கரிசலாங்கண்ணி:
* இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
* கண் பார்வையை தெளிவாக்கும்
* நரையை போக்கும்.
* இதனை "கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்" என்று கூறுவர்.
* மணித்தகாகாளிக்கீரை வாய்ப்புண்ணையும், குடற்புண்ணையும் குணப்படுத்தும்.
* அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
* வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.
* வெப்ப நாடான நமது நாட்டுச் சமையலுக்குப் புழுங்கலரிசியே ஏற்றது.
* மஞ்சள் நெஞ்சிலுள்ள சளியை நீக்கும்.
* கொத்துமல்லி - பித்தத்தைப் போக்கும்
* சீரகம் - வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்
* மிளகு - தொண்டைக் கட்டைத் தொலைக்கும்
* பூண்டு - வளியகற்றி வயிற்றுப்பொருமலை நீக்கிப் பசியை மிகுவிக்கும்
* வெங்காயம் - குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும்.
* பெருங்காயம் - வளியை வெளியேற்றும்.
* இஞ்சி - பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும்.
* தேங்காயை - நீர்க்கோவையை நீக்கும்.
* நல்லெண்ணெய் கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்கும்.

பழமொழி:
* நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு
* நொறுங்கத் தின்றால் நூறு வயது
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

திருக்குறள்
சொற்பொருள்:
* கடன் - கடமை
* சான்றோர் - நல்ல குணங்கள் நிறைந்தவர்
* நாண் - நாணம்
* ஒப்புரவு - உதவுதல்
* கண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்
* வாய்மை - உண்மை
* சால்பு - சான்றாண்மை
* ஆற்றுவார் = செயல் செய்பவர்
* ஆற்றல் - வலிமை
* மாற்றார் -பகைவர்
* துலையல்லார் - ஆற்றலில் குறைந்தவர்
* கட்டளை - உரைகடல்
* இன்னா - தீங்கு
* இனிய - நன்மை
* செய்யாக்கால் - செய்யாவிடத்து
* இன்மை - வறுமை
* இளிவன்று - இழிவானதன்று
* திண்மை - வலிமை
* ஊழி - உலகம்
* ஆழி - கடல்
* இருநிலம் - பெரிய நிலம்
* பொறை - சுமை

இலக்கணக் குறிப்பு:
* என்ப - பலர்பால் வினைமுற்று
* மேற்கொள்பவர் - வினையாலணையும் பெயர்
* உள்ளதூஉம் - இன்னிசையளபெடை
* அன்று - குறிப்புவினை முற்று
* கண்ணோட்டம் - தொழிற்பெயர்
* கொல்லா நலத்தது, சொல்லா நலத்தது - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
* பணிதல் - தொழிற்பெயர்
* ஆற்றுவார், மாற்றார் - வினையாலணையும் பெயர்
* இன்மை, திண்மை - பண்புப் பெயர்கள்
* சான்றவர் - வினையாலணையும் பெயர்
* இருநிலம் - உரிச்சொற்றொடர்
* மன், ஓ - அசைச்சொற்கள்

இன்பம்
கற்றவர் முன்தாம் கற்ற
கல்வியைக் கூறல் இன்பம்
வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
வினைபல புரிதல் இன்பம்
சிற்றினக் கயவரோடு
சேராது வாழ்தல் இன்பம்
பெற்றதை வழங்கி வாழும்
பெருங்குணம் பெறுதல் இன்பம்
- சுரதா

சொற்பொருள்:
* இசைபட - புகழுடன்
* கயவர் - கீழ்க்குணமுடையோர்

இலக்கணக்குறிப்பு:
* தளிர்க்கை - உவமைத்தொகை
* பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் - பண்புத்தொகை
* வழங்கி - வினையெச்சம்
* கற்றல், பெறுதல், வாழ்தல் - தொழிற்பெயர்

ஆசிரியர் குறிப்பு:
* உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.
* இவர் நாகை மாவட்டம் பழையனூரில் 23.11.1921 அன்று பிறந்தார்.
* பெற்றோர் - திருவேங்கடம், செண்பகம்
* பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.
படைப்புகள்:
* தேன்மழை, துறைமுகம்,
* சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
நூல் குறிப்பு:
* தேன்மழை நூலில் இயற்கையெழில் முதலாக ஆராய்ச்சி ஈறாகப் பதினாறு பகுதிகளாகக் கவிதைகள் இடம் பெற்றுல்ளன. அவற்றுள் தேன்துளிகள் என்னும் பகுதியில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.
சிறப்பு:
* இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.
* இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.
* குழந்தையின் தளிர்க்கைபட்ட கூழினை உண்பது இன்பம்.
* கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம்
* வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல பிரிதல் இன்பம்
* சிற்றினக் கயவரோடு சேராது வாழ்தல் இன்பம்.

No comments:

Post a Comment