Wednesday 15 October 2014

நாம் யாருடைய உதவியும் இல்லாமல் இந்த உலகில் வாழ முடியுமா? முடியாது இல்லையா? அப்படித்தான் சில உயிரினங்களும்கூட ஒன்றையொன்றைச் சார்ந்து, உதவி செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றன. அவை எந்த உயிரினங்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? வெவ்வேறு இன உயிரினங்கள் உதவி செய்துகொள்வதை mutualism என்கிறார்கள். சுவாரசியமாக வாழ்க்கை நடத்தும் சில உயிரினங்களைச் சந்திப்போமா?
முதலையின் வாய்க்குள்...
முதலையைக் கண்டு பயப்படாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், ‘புளோவர்’ என்ற சின்னஞ்சிறு பறவைக்கு மட்டும் முதலையைக் கண்டால் துளி பயம்கூடக் கிடையாது. காரணம், முதலையின் பல் டாக்டரே இந்தப் புளோவர்தான். எந்த உயிரினத்தைக் கண்டாலும் இரையாக்கக் காத்திருக்கும் முதலை, புளோவரைக் கண்டால் மகிழ்ச்சியாக வாயைத் திறக்கும். தன்னைச் சாப்பிட்டு விடுமோ என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் புளோவர் முதலையின் பற்களில் அமரும். பற்களின் இடுக்குகளில் சிக்கியிருக்கும் மாமிசத்தைக் கொத்திக் கொத்தி தின்னும். முதலையின் பற்கள் முழுவதும் இப்படிச் சுத்தம் செய்து முடிக்கும்போது புளோவரின் வயிறும் நிரம்பிவிடும். பற்கள் சுத்தமாகி நோய்த் தொற்று இல்லாமல் முதலை ஆரோக்கியமாக இருக்கும்.
புழுவும் பாதுகாப்பும்

எருது, வரிக்குதிரையின் முதுகில் அமர்ந்திருக்கும் எருதுகொத்தி (oxpecker) பறவையைப் பார்த்திருக்கிறீர்களா? எருதின் முதுகில் உள்ள புண்களில் இருந்து வரும் புழுக்களைத் தின்பதற்காகவே இப்பறவை அமர்ந்திருக்கிறது. எருதும் தன் புண்ணிலிருந்து புழு வெளியேறினால் நல்லதுதானே என்று நினைக்கும்! அது மட்டுமல்ல, காடுகளில் ஏதாவது ஆபத்து என்றால் பறவைகள் சீக்கிரமாகவே உணர்ந்துகொண்டு, சத்தமிட்டபடி பறந்துவிடும். ஆபத்தை உணர்ந்து எருதும் சுதாரித்து, தப்பி ஓடிவிடும். அதனால், உயிர் காக்கும் தோழனுக்கு உணவளிக்கிறது எருது!
மகரந்தச் சேர்க்கை

No comments:

Post a Comment