Wednesday 1 October 2014

உயிரினம்: புல்லுக்குள் வீடு

• அணில் பாலூட்டி வகையைச் சேர்ந்தது. கொறித்து உண்ணும் பழக்கமுடையது.
• முதுகில் இருக்கும் மூன்று கோடுகள்தான் தென்னிந்திய அணிலின் அடையாளம்.
• ‘இந்திய அணில்கள்’ என்றழைக்கப்படும் அணில்கள், இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகின்றன.
• அணிலின் வாலில் புதர் போல ரோமம் அடர்த்தியாக இருக்கும். வால் அதன் உடலை விடச் சற்று நீளம் குறைவானது. அணிலின் வாலில் வெள்ளையும் கறுப்புமான ரோமங்கள் கலந்திருக்கும்.
• அணில் குஞ்சுகள் வெளுத்தும் பழுப்பாகவும் காணப்படும். வளரும்போது அதன் நிறம் அடர்த்தியாக மாறும்.
• பழங்கள், கொட்டைகள், மலர்கள், முளைகள், பூச்சிகள் ஆகியவற்றைச் சாப்பிடும். சில வேளைகளில் பறவைக் குஞ்சுகளையும் சாப்பிடும்.
• ஒரு பெரிய அணிலின் எடை சராசரியாக 100 கிராம் மட்டுமே இருக்கும்.
• பெண் அணிலின் கர்ப்பக் காலம் ஒரு மாதத்தைவிடக் கொஞ்சம் அதிகம். 34 நாட்கள்தான். இலையுதிர் காலத்தில் புல்,மென்மையான பொருட்கள் மூலம் கூடுகளை அமைத்து பெண் அணில் குட்டி போடும்.
• ஒரே சமயத்தில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை அணில் போடும்.
• அணில்கள் சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் பழக்கமுடையவை. நகரங்களில் மனிதர்கள் சாப்பிடும் உணவு வகைகளைச் சாப்பிட சீக்கிரமே பழகிவிடும்.
• அணில்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகக் காணப்படும். உணவு ஆதாரங்களை மற்ற உயிர்கள் மற்றும் சகாக்களிடம் இருந்து பாதுகாப்பதில் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்படும்.
• அணில்கள் சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகள்வரை உயிர் வாழும்.

No comments:

Post a Comment