Wednesday 30 July 2014

மண் வாசனை ஏன்?

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு நாடு மட்டுமே திராட்சைப் பழத்தை எப்படி வளர்ப்பது என்று தெரிந்து வைத்திருந்தது. அந்த நாடு, எகிப்து. இதன் பிறகு கிரேக்கர்கள், ஐரோப்பியர்கள் மூலம் திராட்சை பயிரிடுதல் ஆசியாவுக்குள் வந்தது.
சினிமா புரொஜெக்டருக்கு முன்னாடி எப்படி படம் ஓடியது தெரியுமா? 1834-ம் ஆண்டில் வில்லியம் ஜார்ஜ் ஹார்னர் என்பவர் பேப்பரில் வரைந்த படங்களை ஒரு டிரம்மில் உள்பக்கமாக ஒட்டி, படங்களுக்கு இடையில் நீள் வடிவில் துளையிட்டு டிரம்மைச் சுழலவிட்டு சுவரில் படும்படி செய்தார். அதன் பெயர் ‘ஜோட்ரோப்’.
மழை பெய்யத் தொடங்கியவுடன் ஒரு விதமான மண் வாசனை வருகிறதே, அதற்கு என்ன காரணம் தெரியுமா? நிலத்தில் உள்ள ‘அடினோசைட்’ என்ற நுண்கிருமிகள். மழைத் துளிகள் நிலத்தின் மீது பட்டவுடன் அவை மண்ணுடன் வினைபுரிந்து மண் வாசனையைக் கிளப்புகின்றன.

No comments:

Post a Comment