Monday 23 September 2013

பத்தாம் வகுப்புப் படித்தவர்களுக்கு வங்கிப் பணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கியில் இந்திய அளவில் காலியாக உள்ள 1030 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதிகபட்சமாக கேரளாவில் 761 இடங்களும், தமிழகத்தில் 180 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு. அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. வயது தகுதி: 18-26

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பிப்போர் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. எஸ்.சி., எஸ்.டி, ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு ரூ.50.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 03.10.2013

தேர்வு நாள்: 24.11.2013

விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: http://ibpsreg.sifyitest.com/sbtaug13/

கூடுதல் தகவல்களுக்கு, www.statebankoftravancore.com



No comments:

Post a Comment