Thursday 1 November 2012

குரூப் -2 தேர்வுகள் - நவம்பர் 4ஆம் தேதி

நகராட்சி கமிஷனர், உதவி பிரிவு அலுவலர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 3, 631 பணியிடங்களுக்கு, குரூப் 2 தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.

மொத்தம் 6.40 லட்சம் பேர் பங்கேற்றனர். இத்தேர்விற்கான வினாத்தாள்கள் ஒரு தேர்வு மையத்தில் வெளியானதாக பரபரப்பு கிளம்பியது. வினாத்தாள் வெளியானதால், இந்த தேர்வினை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்தது.

இந்நிலையில் இத்தேர்வுகளுக்காக புதிய வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்படி நவம்பர் 4ம்தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: வினாத்தாள் "அவுட்' ஆனதால், மீண்டும் அதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 6.40 லட்சம் பேருக்கு மட்டும், தேர்வு நடக்கிறது. இதில், புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வு எழுதகூடாது. ஆகஸ்டு மாதம்  நடந்த தேர்விற்கு இணையதளத்தில் "டவுன்லோடு' செய்த, ஹால்டிக்கெட்டை பயன்படுத்தி, அதே தேர்வு மையங்களில், மீண்டும் தேர்வினை எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment